வியாழன், 22 செப்டம்பர், 2016

'யட்சி' தொகுப்பை முன் வைத்து..


2007ம் ஆண்டு ஊடறு மின்னஞ்சலுக்கு ஒரு கவிதை, யோகி மலேசியா என்று அனுப்பட்டிருந்தது. அந்நேரத்தில் குழலிவீரன் , மணிமொழி லதா போன்றோர்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஊடறுவுக்கு எழுதுவார்கள்.  யோகி என்றவுடன் இவர் ஆணா பெண்ணா என்ற குழப்பம் இருந்தது. பின்னர் வல்லினம் குழுவினரிடம் உறுதிப்படுத்திய பின்னரே யோகியின் கவிதையை ஊடறுவில் பிரசுரித்திருந்தோம். சிறு வயதில் பெற்ற தன் அனுபவங்களையும், தற்போது பெற்றுவரும் அனுபவங்களையும்இ எது எது தன்னை தொந்தரவு செய்கிறதோ அதை இலக்கியத்தின் ஊடே எழுத்தில் கொண்டு வர முயற்சிப்பதாக கூறுகிறாள் யோகி . தன் மனதின் டைரியை புரட்டும் போதெல்லாம் ஏதோ ஒன்று தன்னை பாதித்திருப்பதை நான் உணர்கிறேன் என்கிறாள். ‘ ஒரு நாள் கடவுளுடனும் மிருகத்துடனும் வாழ நேர்ந்தது‘ என்ற கவிதையும்  ‘என் மரணத்தை நானே சம்பவிக்க’ என்ற கவிதையும் மனதுக்கு பிடித்தமான கவிதைகள் .
1.உவப்பற்று இருக்கிற
இருப்பை
எடுத்துக்கொண்டு
திரிகிற காமத்திற்கு
அறியப்படுத்துவது என்னவென்றால்
பற்றற்று இருக்கும்
யோனிகளுக்கு
உவப்பற்றுதான் போகும்
எல்லா ஆண்குறிகளும்
2.துடைக்கப்படாத ரத்தக் கரைகள்’
பிறிதொரு நாள்
பிறிதொரு நாளில்
பிறிதொரு நாளையைப் பற்றிய
கவிதை எழுத
மனம் எத்தனித்திருந்தது
அதற்கு பிறிதொரு காலமும்
பிறிதொரு நேரமும் தேவைப்பட்டது
தருணம் தோய்ந்த பிறிதொரு நாளில்
அக்கவிதையை எழுதத் தொடங்கினேன்
கவிதை நீண்டு
பல பிறிதொரு நாட்களை
விழுங்கியது
கவிதையை முடித்து
அடியில் என் பெயரை எழுதிட
அந்தப்
பிறிதொரு நாள்
-நன்றி ஊடறு றஞ்சி
ஏப்ரல் 5 2016
----------------------------------------------------------------------------------------------------------------------------------

யோகி என்று படைப்புலகில் அடையாளம் காணப்படும் இவர் நவீன இலக்கிய வெளியில் தன்னை நிலையாக நிறுத்திக்கொள்கின்றார். இவர் ஆரம்ப காலங்களில் பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைஇ கதை, கட்டுரை என எழுதிக்கொண்டிருக்கும் இவரின் பத்திகள் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ என்ற நூல் வடிவில் வல்லினம் வெளியீடாக வெளிவந்திருந்தது. . வாழ்வின் நகர்த்தலில் தான் காண்பதை மிக எதார்த்தமாக தனது எழுத்தின் மூலம் உரையாடுகிறாள் தற்போது யட்சியாக அவளது கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ளது.
தன் உடலிலே இருந்தபோதும் தன் காலாக தான் விரும்பும் காலாக இல்லாதிருப்பதன் வாதை பெண்களுக்கானது.
உனக்கென்ன வீட்டில்தானே இருக்கிறாய் எனும் அதிகார குரல் வீட்டிலிருக்கும் பாடுகளை ஒருபோதும் உணராது.
என் கணவர் வரைபவர் என்றிருக்க வேண்டிய முதல் கவிதை துவங்கி சமூகத்திற்காக அது விரும்பும் பெண்ணாக வாழ்வதன் வாதைகளை உணர்த்தியபடியே செல்கிறார்.
நிலமாகி விதையாகி பயிராகி உணவாகி மீண்டும் பெருநிலமாகி வனமாகி அதை ஆளும் யட்சியாகி ரகசிய கால்களைக் கொண்டு இரண்டாம் ஜாமத்தில் முலையுரசி முத்தமிட்டு மூச்சுமுட்ட முயக்கம்கொண்டு தங்கள் ஆளுமைகளை பேயாட்டம் ஆடிக் கலைத்துப்போவதை நிதானாமாக தன் மொழியால் நிருபித்துக் காட்டியுள்ளார் யோகி 'யட்சி'யில்
யட்சியில் இருக்கும் ஓவியத் தொகுப்பும் அழகு.
வெளியீடு:உயிர்மை
- நன்றி தோழர்  கவிஞர் பெரியசாமி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பெண்ணிட்குரிய அபிலாஷைகள், ஆசாபாசங்களை தன் மொழி கொண்டு சொல் கோர்த்து, பெண்ணின் உணர்வுகளை புறந்தள்ளும் சமூகத்துக்கெதிராய் போர் தொடுத்திருக்கிறது, யோகியின் யட்சி. இவர் வார்த்தைகளில் தெறிக்கும் வலியும், வலிமையையும் இன்றைய பெண்ணுக்கான தேடல்களின் விம்பங்களை பிரதிபலிக்கிறது. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களையும், அதில் சிக்கித்தவிக்கும் பெண்ணின் ஊமை கதறல்களையும் செவ்வணனே சித்தரித்திருக்கிறார் நூலாசிரியர் . புரிந்துகொள்ளும் எளிய சொற்களுள் தாய்மைக்குரிய ஏக்கத்தையும், பரிகாசத்தையும் ஏற்கும் பெண்ணின் உடைதல்களுக்கு உருவமும் தந்திருக்கிறார். யட்சி என்பது வனதேவதை. இன்று பெண் தேவதையாகி பெண்ணின் உணர்வுகளுக்கு பட்டை தீட்டி பதியவைத்திருக்கிறது இந்த யட்சி. 
2016.09.18 -weekly thinakkural -thanks -
- நன்றி தோழி  அக்னிபுத்ரி (கோகிலா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக