செவ்வாய், 16 ஜூன், 2020

யானையைக் கொன்றால் 1000 ஆண்டுகளை அழித்ததற்கு சமம் இல்லையா? (கட்டுரை )



கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து  யானை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேசநிலையில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. கிட்டதட்ட மேலைத்தேய நாடுகளின் இணையதளங்களில் இச்செய்தியினை மொழிபெயர்த்து வெளியிட்டனர். உண்மையில் இம்மாதிரியான செய்தியினை வெளியிடுவதற்கான நோக்கம்தான் என்ன? அந்நாட்டின் நற்பெயரைக் சீர்குழைக்கவா? நிச்சயமாக இல்லை. இம்மாதிரியான கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கவும்,  வெளிநாடுகளில் நடக்கும் இம்மாதிரியான வெளிவராத சம்பவங்களை எச்சரிக்கவும்தான். இது ஒரு நாட்டின் பிரச்னையாக பார்க்காமல் சர்வதேச பிரச்னையாக பார்க்க வேண்டும் என்பது மற்றுமொரு மறுக்கமுடியாத காரணமாகும்.

பசியால் உணவைத் தேடிகொண்டு வந்த யானை, மேலும் அது கர்பம் கொண்டிருக்கிறது. (பிரேத பரிசோதனையில்தான் இவ்விஷயம் தெரியவருகிறது.) கிடைத்த அன்னாசிப்பழத்தை உண்கிறது யானை. பன்றியைக் கொல்வதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை வெடி அந்தப் அன்னாசிப்பழத்தில் இருந்திருக்கிறது. யானையின் வாயில் வெடி வெடித்திருக்கிறது. ரத்தமாக கொட்ட வலி தாங்காமல் யானை அங்கும் இங்கும் அலைகிறது. அதனால் எதுவுமே உண்ணமுடியாத நிலையில் வலிக்கு நிவாரணமாக தண்ணீரின் போய் நின்றுவிடுகிறது. ஓரிரு நாட்களில் அப்படியே மரணமும் அடைகிறது.  




இதற்கு முன்பும் யானைகள் இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கின்றன. என்றாலும் இம்முறை கேரளாவில் கொல்லப்பட்ட யானைக்காக உலக மக்கள் பலரின் மனதையும் உலுக்கி எடுத்ததற்கு காரணம் அதன் கர்பம் ஒரு காரணம் என தாராளமாக சொல்ல முடியும். வயிற்றுக் கருவோடு யானை மரணிக்கும்படியான நிறைய பிரச்சார ஓவியங்கள் வரையப்பட்டு, சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரவும்பட்டன. யானை இறந்ததுகாட்டிலும் வயிற்றில் குழந்தையோடு அது இறந்தது பலருக்கு கண்ணீரை வரவழைத்தும் விட்டது. மேலும், அது இதயத்தை வேதனைப்படுத்துவதாகவும் இருந்தது.

அதன் தாக்கம் 7 கடல்கள் கடந்திருக்கும் மலேசியாவையும் விட்டு வைக்கவில்லை. மலாய் மற்றும் ஆங்கிலச் செய்திகளில் வெளிவந்த செய்திக்கு மூவின மக்களிடத்தில் வந்த பின்னூட்டங்கள் அதை உறுதி செய்தன. பலர் இம்மாதிரி மிருகங்களை வதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கடுமையான தண்டனையை கொடுப்பதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் கருத்து கூறியிருந்தனர்.  

ஆனால், அதே நாளில் கேராளாவில் யானைக்கு நடந்த அந்தப் படுகொலை சம்பவம் ஊடகங்களில் வெளிவந்த அதே நாளில் அம்மாதிரியான ஒரு படுகொலை மலேசியாவிலும் மூன்று யானைகளுக்கு நடந்திருக்கிறது. அதில் ஒரு  யானை கர்பம் தரித்திருந்த யானைதான் என்றாலும் அது மலேசிய மக்களின் கண்களில் விட்டு விலகிய ஒரு செய்தியாகவே இன்றுவரை இருக்கிறது. மலேசிய மிருகங்கள் அமைப்பு இந்தத் துயரச் சம்பவத்தை இணைய தளத்தில் மற்றும் அதன் முகநூலில் பதிவிட்டது. இருந்தபோதும் அச்செய்தியானது எதிரொலிக்கவே இல்லை. எதிரொலிக்கவில்லை என்பதை என்வரையில் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளமுடியவில்லை. மேலும், 32 பில்லியன் மக்கள் வாழும் மலேசியாவில் வெறும் ஆயிரம் பேர் மட்டுமே அந்தச் செய்திக்கு பின்னூட்டம் கொடுத்திருந்தனர். அதைத் தாண்டிய ஒரு நடவடிக்கை இதுவரை நடக்காதது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்திலுள்ள காஹாங் எனுமிடத்தில் இருக்கும் வாழை தோப்பில் விஷம் கொடுக்கப்பட்டதால் அந்த யானைகள் இறந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தக் குற்றம் புரிந்தவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். எனவே வழங்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் வழியாக மிருக அமைப்புக்கு மின்னஞ்சல் செய்யவும். உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ரகசியமாக இருக்கும். இந்தத் தகவலை மலேசிய மக்கள் மற்றும் ஜொகூர் வாசிகள் பரவலாக்குங்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் அவர் கொடும்பத்திற்கும் இத்தகவல் போய் சேரட்டும். என்று மலேசிய மிருகங்கள் அமைப்பு கேட்டுக்கொண்டது.

விஷம் வைத்தவர் செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என அவர் உணர வைப்பதற்காகவும் மலேசியாவில் யானைகள் கொல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் மிருகங்கள் அமைப்பு எடுக்கும் முயற்சிகள் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், அந்த முயற்சிகள் உண்மையில் வேலை செய்கிறதா? பலன் அளிக்கிறதா? குற்றங்கள் தடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

மிருகங்கள் அமைப்பு இறந்த கர்பினி யானையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. விஷம் கொடுக்கப்பட்ட அதன் தாய்மை பொருந்திய வயிறு தெரியும் படி அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மலேசியர்களின் கண்களில் அந்தப் புகைப்படம் படவே இல்லையே.

பழகிவிட்டால் யானையைப் போல ஒரு அன்பான மிருகத்தைப் பார்க்க முடியாது என்பார்கள். யானை ஒரு ஆபத்தான மிருகமே இல்லை. உண்மையில் அது சாதுவான மிருகம். பல்லுயிர் பெருக்கத்தின் விந்து. அழகு. ஓர் ஆனையின் இழப்பானது ஆயிரம் ஆண்டுகளை இழப்பதற்கு சமம். எத்தனை ஆண்டுகளை நாம் வாழ்த்துக்கொண்டும் இயற்கையை அழிந்துக்கொண்டும், நம்முடைய சந்ததிகள் வாழ வேண்டிய வாழ்கையை சேர்த்தே அழித்துக்கொண்டிருக்கிறோம்?

அனைத்திற்கும் பொதுவான இந்த பூமியையும் மிருகங்களுக்கும் உரிமையுள்ள இந்த நிலத்தையும் எந்த சொரனையும் இல்லாமல் பிடுங்கிக்கொள்ளும் அதிகாரத்தை நமக்கு யார் கொடுத்தது? வாழ்கையின் மீதான ஏமாற்றத்தை இன்னும் நான் எப்படி சொல்ல என்று எனக்கு தெரியவில்லை?  

   

வியாழன், 4 ஜூன், 2020

என் பூமி! என் பொறுப்பு...




 என் பூமிக்கு யாரோ செய்யும் கேட்டுக்கு நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புதான். என் பூமி அழிவதற்கு எங்கோ ஒரு புள்ளியில் நானும் காரணம்.
என் அழகிய பூமி, மாசடைந்து
"என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று தவிப்பதற்கு என் பங்கும் இருக்கிறது.
அதைபோலவே என் பூமியை காப்பாற்றும், தூய்மைப்படுத்தும், அதை நம் பூமிக்கு செய்யாதே என சொல்கிற கடமையும் கடப்பாடும்கூட எனக்கு இருக்கிறது.
நீ போடும் பிளாஸ்டிக் குப்பையை நான் சேகரிப்பேன். அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு எதிராக கோஷம் எழுப்புவேன். பதிவு எழுதுவேன்.
அதைவிடவும் என் அழகிய அன்பான பூமியை அடுத்த சந்ததியினருக்கு கொடுக்க பாடுபடுவேன்...
-யோகி
இந்த நாளில் செவெண்ட் சுசுயின் உரையை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஹலோ.
நான் செவேண்ட் சுசூகி. மாற்றத்தை உருவாக்க விரும்பும்,  சுற்றுச்சூழல் குழந்தைகள் அமைப்பு சேர்ந்தவர்கள். 12 மற்றும் 13 வயதுள்ளவர்கள். வாநிசா சூட்டீ, மார்கன் ஹெயுசர், மிச்செய்லி குய்க் மற்றும் நானும்றோம். நாங்கள் எங்கள் முயற்சியாலேயே பணம் திரட்டிக் கொண்டு 5,000 மைல்கள் கடந்து வந்துள்ளோம், பெரியவர்களே நீங்கள் உங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்ல.

இன்று இங்கே வந்துள்ள எனக்கு எந்த மறைமுக நோக்கமும் இல்லை. நான் எனது எதிர்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். எனது எதிர்காலத்தை இழப்பது என்பது தேர்தலில் தோற்பது போலவோ, பங்குச் சந்தையில் சில புள்ளிகளை இழப்பது போன்றோ இல்லை.

நான், இனி வரும் தலை முறைகளுக்காக பேச வந்துள்ளேன். நான் இங்கே பேசுவது, எவரின் காதுகளிலும் விழாமல் இருக்கும், உலகெங்கும் பட்டினியால் அழும் குழந்தைளுக்காக. நான் இங்கே பேசுவது, வேறெங்கும் போக வழியில்லாததால் காரணத்தால், இந்தப் பூமியில் அழிந்து கொண்டிருக்கும் எண்ணிக்கையில் அடங்கா விலங்குகளுக்காக. ஓசோனில் உள்ள ஒட்டையால் நான் சூரிய வெளியில் செல்வதற்கு பயப்படுகிறேன். உள்ளே இழுக்கும் காற்றில் என்னென்ன இரசாயனங்கள் இருக்கிறது என்பது தெரியாததால் சுவாசிக்கப் பயப்படுகிறேன்.

நான் வாழும் வான்கோவரில், தந்தையுடன் மீன் பிடிக்கச் செல்வதுண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மீன்கள் எல்லாம் புற்று நோயில் பாதிக்கப்பட்டு இருப்பதை காணும் வரை. அப்போது நாங்கள் கேள்விப்படுகிறோம் தாவரங்களும், விலங்குகளும் அனுதினமும் முற்றாக அழிந்து கொண்டிருப்பதை, முற்றாக பூடற்று மறைவதை. பெருங்கூட்டமாக வன விலங்குகளையும், பறவைகளும் பட்டாம் பூச்சிகளும் நிறைந்திருக்கும் மழைக் காடுகளையும் என் வாழ்நாளில் காணவேண்டும் என்று கனவு காண்கிறேன் ஆனால் இவைகள் எல்லாம் என் பிள்ளைகள் பார்ப்பதற்காகவாவது இருக்குமா எனத் தெரியவில்லை.

நீங்கள் என்னுடைய இந்த வயதில் இவைகளுக்கெல்லாம் கவலைப்பட்டதுண்டா? இவையத்தனையும் எம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ நமக்கு இன்னும் நிறைய காலம் இருப்பது போல, எல்லா தீர்வுகளும் கைவசம் வைத்திருப்பதைப் போல, நாம் ஏதும் செய்யாமல் இருக்கிறோம். நான் சிறுமி. என்னிடம் இதற்கானத் தீர்வுகளும் இல்லை. என்னிடம் இல்லை…. உங்களிடமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும் என விரும்புகிறேன். ஓசோனில் விழுந்த ஓட்டைகளை எப்படி அடைப்பது என்று உங்களுக்குத் தெரியாது. இறந்து போன ஓடையில் சால்மன் மீன்களை எப்படி மீண்டும் வர வைப்பது என்று உங்களுக்குத் தெரியாது. முற்றாக அழிந்துபட்ட (extinct) விலங்கினத்தை மீண்டும் எப்படி கொண்டு வருவது என்று உங்களுக்குத் தெரியாது. பாலைவனமாய் மாறிய காடுகளை மீண்டும் காடுகளாக்குவது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு சரி செய்வது எப்படி என்று தெரியாவிட்டால் தயவு செய்து சிதைக்காமல் இருங்கள்.

இங்கே நீங்கள், உங்களது அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கலாம், வணிகராக இருக்கலாம், அமைப்பு சார்ந்தவராக இருக்கலாம், பத்திரிக்கையாளராகவோ அல்லது அரசியல் வாதியாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு தாயாக, தந்தையாகவும் இருக்கிறீர்கள், சகோதரியாக, சகோதரனாக, அத்தையாக, மாமாவாக, உறவாக இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் இன்னொருவரின் குழந்தையாகவும் இருக்கிறீர்கள்.
நான் ஒரு குழந்தை தான். ஆனால் எனக்குத் தெரியும், நாமெல்லாம் ஒரே குடும்பம் தான் என்று, 500 கோடியினர் கொண்ட வலிவான குடும்பம், 3 கோடி உயிரினங்கள் கொண்ட வலிமையான குடும்பம். இந்த எல்லைக் கோடுகள், அரசாங்கங்கள் எல்லாம் அதை மாற்றிவிட முடியாது. நான் சிறுமி தான். ஆனால் எனக்குத் தெரியும் நாம் அத்தனை பேரும் ஒன்றாக இருக்கிறோம். ஒரே உலகாக ஒரே இலக்கிற்காக செயல்பட வேண்டும் என்று.

என்னுடைய….என்னுடைய கோபத்தில் நான் குருடாக இல்லை; என்னுடைய அச்சத்தில் நான் எப்படி உணர்கிறேன் என்பதை உலகிற்குச் சொல்ல பயப்படவில்லை. எனது நாட்டில் நாங்கள் மிக அதிகமாக வீணடிக்கிறோம். நாங்கள் வாங்குகிறோம்…. தூக்கி எறிகிறோம். வாங்குகிறோம்…. தூக்கி எறிகிறோம். வாங்குகிறோம்…. தூக்கி எறிகிறோம். ஆனாலும் இந்த வடக்குலக நாடுகள் தேவையானவர்களுக்காக தன்னிடமிருப்பதை பகிர்ந்து கொள்வதில்லை. நம்மிடம் அளவிற்கு அதிகமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளப் பயப்படுகிறோம். நமது செல்வத்தில் ஒரு பகுதியை கொடுக்கப் பயப்படுகிறோம்.

கனடாவில் வசதி மிக்க வாழ்வை நாங்கள் வாழ்கிறோம். ஏராளமான உணவு இருக்கிறது. தண்ணீரும், இருப்பிடமும் இருக்கிறது. எங்களிடம் கைக் கடிகாரங்கள், சைக்கிள்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் ஏராளமாக உள்ளது. இந்தப் பட்டியல் இரண்டு நாட்கள் சொல்லுமளவு நீண்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிரேசிலில் தெருவோரக் குழந்தைளுடன் செலவளித்த கொஞ்ச நேரத்தில் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அப்போது இப்படித்தான் ஒரு குழந்தை சொன்னது; ”நான் பணக்காரியாக இருக்க வேண்டும். அப்படி பணக்காரியாக இருந்தால் எல்லா தெருவோரக் குழந்தைகளுக்கும் உணவையும் ஆடைகளையும். மருந்துகளையும். வீடுகளையும், அன்பையும் பாசத்தையும் கொடுப்பேன்,” என்று.
வீதியில் இருக்கும், கொடுக்க எதுவுமே இல்லாத ஒரு குழந்தை பகிர்ந்து கொள்ள ஆசை கொள்ளும் போது, எல்லாமும் கொண்டிருக்கும் நாம் ஏன் இன்னும் இவ்வளவு பேராசைக்காரர்களாக இருக்கிறோம்?

என் வயதில் இருக்கும் இந்தப் பிள்ளைகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நாம் எந்த இடத்தில் பிறக்கிறோம் என்பது பெரிய வித்தியாசத்தை தருகிறது. ரியோ (ரியோ டி ஜெனிரா)வில் சேரியில் வாழும் ஒரு குழந்தையாக இருந்திருக்கலாம். சோமாலியாவில் பட்டினியில் வாடும் குழந்தையாக இருந்திருக்கலாம் அல்லது மத்திய கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டவளாக இருந்திருக்கலாம் அல்லது இந்தியாவில் பிச்சை எடுப்பவளாக இருந்திருக்கலாம். நான் சிறுமி தான். ஆனால் எனக்குத் தெரியும் போருக்காக செலவிடப்படும் அத்தனை பணத்தையும் வறுமையை ஒழிக்கும் சூழல் பிரச்சனைகளுக்கு செலவளித்தால், அதற்கான ஒப்பந்தங்களை செய்தால் இது எப்படிப்பட்ட அற்புதமான பூமியாக இருக்கும்.

பள்ளிகளில், ஏன் மழலையர் பள்ளிகளிலேயே கூட, நீங்கள் எங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். பிறருடன் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாதென சொல்லிக் கொடுக்கிறீர்கள், பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளங்கள் என்று. மற்றவர்களுக்கு மதிப்பு கொடுங்கள் என்று. நம்முடைய குப்பைகளை சுத்தம் செய்யுங்கள் என்று. பிற உயிரினங்களை துன்புறுத்தாதீர்கள் என்று, பகிர்ந்து கொடுங்கள் என்று, பேராசை கொள்ளாதே என்று. அப்புறம் ஏன் நீங்கள் இப்படி செய்கிறீர்கள்நாங்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னீர்களோ அதையே செய்கிறீர்கள். இந்த மாநாடுகளை நீங்கள் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். யாருக்காக கலந்து கொள்கிறீர்கள் என்பதையும் தான். நாங்கள் உங்களின் பிள்ளைகள். நாங்கள் எந்த மாதிரியான உலகில் வளர வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்கிறீர்கள்.

எல்லாம் சரியாகிவிடும், இதுவே உலகில் முடிவு அல்ல. நாங்கள் இருக்கிறோம்ஆம் நாங்கள் இருக்கிறோம் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவைச் செய்ய”, என்று சொல்லி பெற்றவர்கள் பிள்ளைகளை தேற்ற வேண்டும். நம்பிக்கை தரவேண்டும். ஆனால் நீங்கள் இதை ஒரு போதும் இதைச் சொல்வீர்கள் என்று நினைக்கவில்லை.
நாங்கள் உங்களின் முன்னுரிமைகளில் இல்லையா?

நீ யார் என்பது நீ செய்வதில் இருந்து தெரியும்நீ என்ன சொல்கிறாய் என்பதில் இருந்து அல்ல,” என்று என் தந்தை சொல்வார். ஆனால் நீங்கள் செய்வதெல்லாம் என்னை இரவில் அழ வைக்கிறது. பெரியவர்களான நீங்கள் எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாகச் சொல்லுகிறீர்கள். ஆனால் நான் சவால் விடுகிறேன், தயவு செய்து உங்களின் வார்த்தைகளை செயலில் காட்டுங்கள் என்று.
நன்றி.
---------------------------------------------------------------------------------
சுசுகி இப்படிப் பேசி 28 ஆண்டுகளாகிவிட்டது. இவர் கனேடிய சூழலியலாளர் டேவிட் சுசுகியின் மகள் என்பது குறிப்பிடதக்கது. video link
https://www.youtube.com/watch?v=oJJGuIZVfLM 

நன்றி முக நூல் நண்பர் Ramasamy selvam