திங்கள், 27 ஜூலை, 2020

வட்டி முதலைகள் இடத்தை, இணைய மோசடிகும்பல் பிடித்திருக்கின்றனரா? (கட்டுரை)



 ஒரு காலக்கட்டத்தில் மலேசியாவில் பெரிய பிரச்னையாக இருந்தது வட்டி முதலைகள் பிரச்னையாகும். இந்த வட்டி முதலைகளின் பண மோசடியில் விழுந்து வீழ்ந்த பலப்பேரை மலேசிய மண் சத்தமில்லாமல் தனக்கு இரையாக்கியிருக்கிறது. ஆனால், சிலரின் மரணங்கள் நாட்டையே சலசலப்பு அடையவைத்து இந்த வட்டி முதலைகளின் கொட்டத்தை அடக்கியும் இருக்கிறது.

வட்டி முதலைகளின் பிரச்னைகள் தீர்ந்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. ஆனாலும் அதன் தொடக்ககால வீரியம் குறைந்திருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால், தற்போது இணைய வழி நடைபெறும் பண  மோசடியானது வட்டி முதலைகளின் பண மோசடியைக் காட்டிலும் பல மடங்கு தீவிரமாக இருக்கிறது மிகவும் அதிர்ச்சியாக மட்டுமல்ல நாட்டு மக்களிடத்தில் பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இணைய தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித குல மேம்பாட்டுக்கு உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஏழைகளின் வாழ்கைக்கு அது ஒரு கொல்லிகட்டையாக மாறிவிடுவதில் தயங்குவதில்லை.

'ஸ்கேம்' என்று சொல்லக்கூடிய இந்தப் பண மோசடிக் கும்பல் குறித்து பெரிதாக யாரும் வெளிபடையாக புகார் அளிப்பதில்லை. தவிரவும் அதற்கான சந்தர்ப்பங்களும் சாதகங்களும் சரியாக அவர்களுக்கு அமைகிறதா என்பது மற்றுமொரு பிரச்னையாகும்.

கடந்த வாரத்தில் மலேசிய சோசலிசக் கட்சி அலுவலகத்தில் இது தொடர்பாக நடத்தபட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நாட்டு மக்களிடத்தில் பல கேள்விகளையும் அதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தமது கஷ்டத்திற்காக முகநூலில் பதிவிட்டிருந்த கடன் கொடுக்கும் விளம்பரத்தைப் பார்த்து, தமக்கு உதவிக் கிடைக்கும் என்ற நம்பிகையில் கடனுக்கு விண்ணப்பித்த ஒரு குடும்பத்தின் பரிதாபக்கதையை பிஎஸ்எம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.  

எத்தனையோ சம்பவங்கள் இருக்க இந்தக் கதையை பிஎஸ்எம் வெளிகொண்டுவந்ததற்கான காரணம் என்ன? என்ன நடந்தது?

வள்ளி மற்றும் ஆறுமுகம். இந்த ஜோடி கண்ணில் காணாத ஒரு பண மோசடி கும்பலின் வலையில், தன்னையும் அறியாமல் சிக்கி பின் அதிலிருந்து இனி மீள முடியாது என்று கடைசி நம்பிகை எனும் கயிரும் அறுந்துவிட அவர்கள் நாடியது தற்கொலை எனும் முடிவை. தமக்குப் பிறகு இந்தக் கடன் தன் வாரிசுகளையும் பின் தொடர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்களையும் தன்னுடனேயே இந்த உலகத்தை விட்டு வந்துவிடுமாறு கூறியிருக்கிறார்கள். அவர்களின் மூத்த மகள் இந்த மரணத்தில் உடன்படாமல் தன் தாத்தா-பாட்டியிடம் நடக்கவிருப்பதை கூறவிட அவர்கள் வந்து அந்த அசம்பாவித்தை தடுத்து, தற்போது இப்பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்பட பிஎஸ்எம் உதவியை நாடியிருக்கின்றனர்.



முன்னதாக அவர்கள் முகனூல் வழி, காணப்பட்ட ஒரு நிறுவனத்திடம் கடனுக்கு விண்ணப்பித்தபோது, வங்கியில் செயல்படுவதைப் போன்றே அவர்களின், சம்பள ஆதாரம், வங்கி ஆதாரம் உள்பட எல்லாத்தையும் அந்த மோசடிக் கும்பல் வாங்கியிருக்கிறது. தொடக்கத்தில் ஆறுமுகம் விண்ணப்பம் செய்தார். அவர் கோரியது 15 ஆயிரம் வெள்ளிக்கான கடனுதவி. அந்த விண்ணப்பம் தாமதம் ஆகவே, வள்ளியின் பெயரில் கடனுதவி பெறலாமா என்று முகநூல் வழியாக மீண்டும் முயற்சிக்கும்போது, முகம் காட்டாத, டோமி எனும் பெயர்கொண்ட ஒரு நபர், கடன் கொடுப்பதாக முன்வந்திருக்கிறார். மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், சேம நிதி போதுமானதாக இருப்பதால் விண்ணப்பிக்க முடியும் என்று நம்பிக்கை கூறி வேலையில் இறங்கிறார்.  

இந்த விண்ணப்பம் செய்து காத்திருந்தக் காலக்கட்டத்தில் சந்தேகம் ஏற்படும் வகையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்திடம் கேள்விகள் கேட்டபோது, கடனைப் பெற்ற மற்றவர்களின் புகைப்படங்களை ஆதாரமாக காண்பித்து, ஆறுமுகம்-வள்ளிக்கு நம்பிகையை வழுக்க செய்திருக்கின்றனர். பின் இவர்களின் வங்கி கணக்கை தரமாக மாற்ற வேண்டும் என்று கூறி, அதற்கு கடன் நிறுவனமே உதவுவதாக சொல்லி, அவர்களை புதியதாக  வங்கி கணக்கை ஆரம்பிக்கச் சொல்லி, அதன் ஏ.டி.எம் கார்ட்டை அவர்களுக்கு தபாலில் அனுப்ப சொல்லியிருக்கின்றனர். கூடவே புதியதாக ஓர் அலைபேசி எண்ணையும், இவர்களின் பெயரிலேயே பதிவு செய்யச் சொல்லி அதையும் சேர்த்து அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். கடனுதவி அவசியமாக தேவைப்படும் பட்சத்தில் இவர்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்திருக்கின்றனர் இந்த ஏழை ஏமாளிகள்.

கடனுதவி கிடைக்கும் என்ற நம்பிகையில் இருந்தவர்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு பேரிடியாய் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அழைத்தது காவல் நிலையத்திடமிருந்து. அவர்களை நேரில் வர சொன்னதும், என்ன ஏது என்று விவரம் அறிய போனவர்களின் வாழ்கையே இன்று புரட்டிப்போடப் பட்டிருக்கிறது. பேராக், ஜொகூர், பினாங்கு,கோலாலம்பூர் என வள்ளி-ஆறுமுகம் இருவரின் பெயரிலும் தற்போது 27 இணைய பண மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


ஒவ்வொரு வழக்கிற்கும் ஜாமின் கட்டுவதற்காக தன்னிடம் மிச்சமிருந்த கார், மோட்டார் சைக்கிள், இன்னும் இதர பொருட்கள் என அனைத்தையும் விற்று தீர்த்துவிட்டதாகவும், கொடுப்பதற்கு இனி உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதால் இந்த மன உளைச்சலிலிருந்து விடுபட மரணத்தை நாட முடிவெடுத்தோம் என வள்ளி சொல்லும்போது, அந்த வலியை, ஏழ்மை நிலையில் இருக்கும் யாராலும் புரிந்துக்கொள்ள முடியும்.

பிஎஸ்எம் என்ன சொல்கிறது? 

இந்த பண மோசடி அல்லது ஊழல் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் வள்ளி இருவருமே போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிகையும் எடுத்ததாக அறியமுடியவில்லை. காரணம் அவர்கள் கணக்கில் போடப்பட்டதாக சொல்லப்படும் பணத்தை எங்கு யாரால் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை, அங்கிருக்கும் ரகசிய கெமராக்களில் சோதித்தால் போலீசுக்கு இந்தக் மோசடி கும்பல் குறித்து அறிய முடியும். ஆனால், புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகள் என கூறி அவர்களை கைது செய்கின்றனர். அதைவிடவும், இந்தத் தவறை அவர்கள்தான் செய்தார்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்கள் செலுத்தக்கூடிய  அபராதப் பணம் குறைவாகவும், குற்றத்தை மறுக்கும் பட்சத்தில் ஜாமின் தொகை மூன்று மடங்கு அதிகமாகவும் விதிக்கப்படுகிறது. பணம் இல்லாதவர்கள் எப்படி பணத்தை செலுத்த முடியும்? எனவே அவர்கள் இந்த சிக்கலிலிருந்து விடுபட குற்றத்தை ஒப்புக்கொள்ள போலீஸ் தரப்பு ஊக்கப்படுத்துவதாக  தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிட்டு பிஎஸ்எம் நாட்டின் தலைமை நீதிபதிக்கும், சட்டமன்றத்தலைவர் காவற்படையின் தலைவர், வழக்கறிஞர் மன்றத்தலைவர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதியுள்ளது.  

இன்று நாம் இந்த விவகாரத்தை பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் டெங்கிலைச் சேர்ந்த 34 வயது கொண்ட இந்தியப் பெண்மணி ஒருவர் இதேமாதிரியான பண மோசடி வழக்கில் சிக்கி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஜாமின் பணம் செலுத்த தவறினால் சிறையில் தள்ளுப்படுவதைத் தவிர்க்க 4 பிள்ளைக்குத் தாயான அவர் தற்போது பிஎஸ்எம் உதவியை நாடியிருக்கிறார்.

இந்த இணைய பண மோசடியால் மலேசியாவில் எல்லா இன மக்களுமே பாதிக்கப்படுகின்றனர். காஜாங்கில் மலாய்க்கார பெண்மணி ஒருவர் மீது 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவரால் ஜாமின் பணம் செலுத்த முடியாததால் தவறே செய்யவில்லை என்றாலும் வேறு வழியில்லை என்று சிறையில் இருக்கிறார். இந்த மாதிரி எத்தனை வழக்குகள் இருக்கிறது என்பது நமக்கு ஒட்டுமொத்தமாக தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை இப்படியே விட முடியாது. வறுமை, ஏழ்மை, அவசியப் பணத்தேவை உள்ளிட்டக் காரணங்களினால் பணம் கடன் பெறலாம் என்று முடிவெடுக்கும் ஒருவரின் உயிரே அபாயத்தில் சிக்கவைக்க சில கும்பல் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் செயல்படுகின்றனர். யாரோ செய்யும் குற்றம் அப்பாவிகள் பலியாவது கவலையை தருகிறது. 15 வெள்ளி கடனுதவி விண்னப்பம் செய்து இன்று 2 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் ஆறுமுகம்-வள்ளி தம்பதிகளின் கதை எல்லாருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். ஸ்கேமர்களுக்கு ஓர் உயிர் என்பது தூசுமாதிரியாக தெரியலாம். அந்த உயிரின் மதிப்பு அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால், குடும்ப பொறுப்பை சுமக்கும் ஒவ்வொருவரும் அறிவார்கள் அதன் எல்லையில்லாத மதிப்பை.


நீதிக்காக போராடுவோம். 

யோகி
நன்றி 26/7/2020 தமிழ்மலர் நாளேடு

சனி, 4 ஜூலை, 2020

அன்புள்ள ஊடறுவுக்கு என் அன்பும் -16-வது வயது வாழ்த்துகளும்


2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஊடறு பெண்கள் சந்திப்புக்கு அழைக்கப்பட்டபோது, எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், முன்னணி பெண் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைத்துப் பெண்களுக்கான தளமாக இருந்த ஊடறுவை நான் கவனித்து வந்தது பெரிதில்லை. பெண் சுதந்திரம் பேசும் எந்தப் பெண்ணுக்கும் ஊடறுவை தெரியாமல் இருக்காது

ஆனால், பல பெண்களின் குரலாக ஒலிக்கும் ஊடறு கவனிக்ககூடியவளாக நான் இருந்தது என் நகர்வுகளின் மீது எனக்கே நம்பிக்கை கொடுத்தது என்று தாராளமாக சொல்லலாம். ஊடறுவிடனான எனது தொடக்கமும் அப்போது தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஊடறுவோடும் அதன் இயக்குனர் (அம்மா) றஞ்சியோடும் இணைந்து செயலாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, பெண் மொழியும் பெண் எழுத்தும் வெறும் வாசிப்பால் மற்றும் வந்துவிடுவதில்லை. அது ஒரு சிந்தனை திறப்பு. அதன் திறவியானது செயற்பாடுகளில்தான் உண்டு என எனக்கு தோன்றுகிறது. அவ்வாறான பெண்களுடனான சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் அதைவிடவும் அவர்களோடு இணைந்திருக்கும் சில நாட்களில் உண்மையில் அவர்கள் யார் என்ற அடையாளப்படுத்துதலும் என்னை பலவாறாக கலைத்துப் போட்டு சிந்திக்க வைத்திருக்கின்றன. இன்று என்னுடைய பெண்கள் சுதந்திரம் தொடர்பான புரிதலுக்கு ஊடறுவின் பங்கு கணிசமாக உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை.


பெண்களின் செயற்பாடுகள், பெண் மொழி, பெண் எழுத்துக்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு பெண்களிடத்தில் ஆதரவு எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டால், அதற்கான பதில் எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்ப்பெண்கள் அதாவது தமிழ்நாட்டுப் பெண்கள் மீது புனிதம் கட்டமைத்தும், மலாயா பெண்களுக்கு ஏன் அந்தப் புனிதம் வசப்படவில்லை என்பது மாதிரியான ஒருவரின் கேள்வி மற்றும் அதற்கான பதில் குறித்தும் எழுதியிருந்தேன். அதில் வந்து எழுதிய அத்தனை பேரும் ஆண்கள்தான். சில மணி நேரத்திற்கு அந்தப் பதிவில் ஒருப்பெண்கள்கூட விருப்பக் குறியும் இடவில்லை. பின் ஆதரவாக சில விருப்பக்குறிகள் விட்டிருந்தனர். (8பேர்)

பதிவின் இறுதியில் நான் எழுதியது இதுதான்.

தமிழ்ப்பெண்கள் என அவர்கள்மீது புனிதத்தை கட்டமைப்பதும் அவர்களை ஒடுக்குவதற்கு சமமானது என்பது என் கருத்து. தயவு செய்து அது யாராக இருந்தாலும் நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழ்நாடோ எந்நாடோ எங்களுக்கு எப்படி வாழ்வதென்பது தெரியும்.

நான் தவறாக எழுதியிருக்கேனா அல்லது அதில் ஆணாதிக்க சிந்தனை ஏதும் இருக்கிறதா என்று என் எழுத்தில் நானே தேடிப்பார்கிறேன். ஒரு வேளை பெண்களின் புனிதத்தை எழுதியிருந்தால் பெண்கள் ஆதரித்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. என் பெண்ணிய சிந்தனை மீது கல்லெரியப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

16 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஊடறு, பெண்களுக்கான தளம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்திருக்கிறது. கொடுத்தும் வருகிறது. பேதம், வர்கம், இனம், மொழி, அந்தஸ்து என்று அனைத்தையும் ஊடறுத்து பெண் என்ற ரீதியில் அனைவரும் சமமே என்று செயலில் காட்டுவதற்கு ஊடறுவினால்தான் முடிகிறது. தனக்கான தனித்துவத்தை அது அமைத்துக்கொள்ளவில்லை. சுயம் அதற்கு இன்னொரு பெயர்தான் ஊடறு. நன்றி

 ஜூன் 2020

நாங்கள் அகதிகள்


நாங்கள் வாழ்ந்தது ஓர் அழகிய பூமியில்
அண்ணாந்து  பார்த்தால் அழகிய நீல வானம்
திரும்பிய பக்கமெல்லாம் எழில் கொஞ்சும் இயற்கை
எத்தனை அழகு தெரியுமா எங்களின் ஊர் ?
எத்தனை அன்புகொண்டது தெரியுமா 
எங்களின் சுற்றம்?

நான் சொல்வது உங்களுக்கு விசித்திரமாக இருக்கிறதா?
எல்லா இடத்திலும் ஒன்றுபோலதானே இருக்கிறது என்று 
நீங்கள் நகைப்புக்கிடையில் கூறுவது எனக்குக் கேட்கிறது…

நண்பர்களே!
அப்படியல்ல எங்களின் நிலை…
எங்களின் வாழ்க்கை உங்களைப்போல அல்ல..
நாங்கள் எங்கள் பூமியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்கள்
நாங்கள் போரில் வானத்தைப் பார்த்துக்கொண்டே 
தட்டுப்பட்ட ஒரு நாட்டில் கள்ளத்தனமாக தஞ்சம் புகுந்தவர்கள்
இயற்கைகொடுக்கும் அத்தனையும் எங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது
எங்கள் ஊர்
எங்கள் சுற்றம் 
அனைத்தும் இனி எங்களின்
நினைவுகளில் மட்டுமே இருக்கப்போகிறது…

நண்பர்களே! 
அறிவீர்களா?
சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நாங்கள்
கடலில் தோணியில் வந்துக்கொண்டிருந்தோம்
எங்களில் பாதிப்பேர் கடலுக்கே இரையானோம்
மீதிப் பேருக்கு இடம் இல்லை என 
இந்த பூமியைச் சொந்தம் கொண்டாடும் நாடுகள் மறுத்தன

நண்பர்களே உங்களுக்கு இன்னொன்றும் தெரியுமா?
எங்களை அகதியாக அனுமதித்த நாடுகளில்
எங்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
எங்களின் வாழ்க்கை உங்களுக்கெல்லாம் 
வரவே கூடாது 
உங்களின் தாய்நாட்டில் அடைக்கலம் கொண்டிருக்கும் நாங்கள்
உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்..

எங்களுக்கு அது தெரியும்
உங்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை
எங்கள் மீது சகிக்க முடியாத மணம் வீசுகிறது; 
நாங்கள் தூய்மையாக இல்லை;  
நாங்கள் தீவிரவாதிகள்; 
நாங்கள் நாகரீகமற்றவர்கள்:
நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைகளிலிருந்து 
நாங்கள் புரிந்துக்கொள்கிறோம்
உங்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்பதை…

நண்பர்களே! 
இந்த பூமியையும்
வானத்தையும்
இயற்கையையும்
விரும்பும் நீங்கள்
அகதிகளான  
எங்களை வெறுப்பது எதனால்? 
மனிதர்களாக மனிதம் கொண்டு 
ஒரு முறை 
ஒரே முறை பாருங்களேன் 
எங்களின் சுற்றமாக 
நீங்களே அங்கு இருப்பீர்கள்

- யோகி 2020


We lived on a beautiful land.
If you looked up, there was a beautiful blue sky.
Whichever direction you turned, there was beautiful nature.
Do you know how beautiful was our town?
Do you know how lovely our surroundings were?

Does what I say 
sound strange to you?
I can hear you 
say amidst laughter
that it is just the same
everywhere.

Friends!
Our status 
is not so.
Our lives 
are not like yours.
From our land,
we have been driven away. 
Looking at the sky
during the war,
we took refuge illegally 
in a country we sighted.
Everything provided by nature
has been denied to us.
Hereafter, 
our town and 
our surroundings
are all going to be 
in our memories only.

Do you know friends?
Driven away from 
our own land, 
we were coming 
by the sea
in sailboats.
Half of us fell
prey to the sea itself.
To those who were leftover,
countries that claim
ownership of this land
refused any space.

Do you know 
one more thing too friends?
Do you know 
what is the respect that we get
in the countries which have 
permitted us as refugees?
All of you
should never have to 
live like us. 
Having taken asylum
in your motherland,
we are duty bound to express 
our gratefulness to you.

We know that
you do not like us.
An unbearable smell
emanates from us;
we are not clean,
we are extremists and
we are uncivilized.
From these words that you say,
we understand that 
you do not like us. 

Friends!
Why do you 
who love this land,
sky and nature
hate us who are refugees?
Look at us 
humanely
just only once 
as humans.
Only you would be therein
as our kith and kin. 

~Sri 1118 :: 04072020 :: Noida