புதன், 28 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 6

 கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை

சிபில் கார்த்திகேசு கல்லரை...
பிறப்பு: 3 செப்டம்பர் 1899
இறப்பு: 12 ஜூன் 1948

நான் ஈப்போ செல்வதற்கு இரண்டு காரணங்கள்தான் இருந்தது. ஒன்று, ஆதவன் அண்ணாவோடு கொஞ்ச நேரத்தை செலவிடனும். இரண்டு, சிபில் கார்த்திகேசு துயில் கொண்டிருக்கும் கல்லரைக்கு வணக்கம் செய்யனும். அந்தக் கல்லரைக்கு அழைத்துச் சொல்வதாகத் தோழர் நாகேந்திரன் உறுதி கூறிய பிறகுதான் நான் இந்தப் பயணத்தையே உறுதி செய்திருந்தேன்.
அடுத்து நாங்கள் அந்தக் கல்லரைக்குதான் சென்றோம். வசதியான,அழகான சீன தேவாலயம் அது. பல கல்லறைகள் மலாயா சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்டவையாகும்.

1800 களில் பிறந்தவர்களும் அதிலும் வெள்ளையர்களின் கல்லரைகள் அங்கு அதிகமாகக் காண முடிந்தது. சிபில் கார்த்திகேசு துயில் கொண்டிருக்கும் அந்தக் கல்லரையைத் தோழர் நாகேந்திரன் இதற்கு முன்பு ஒருமுறை தரிசித்துவிட்டிருந்ததால், நாங்கள் தேடுவதற்கு வழியில்லாமல் சுலபமாகிவிட்டது. நேராகக் கல்லரைக்குச் சென்றோம்.

சிபில் கார்த்திகேசு ஒரு கம்யீனிஸ் ஆதரவாளர். மலாயாவில் ஜப்பானிய ஆக்கரமிப்பு இருந்தபோது, தாதியாக இருந்த இவரும் இவரின் கணவரும் ஜப்பானியர்களை எதிர்த்த கம்யூனிஸ் ஆதவாளர்களுக்கு ஆதரவு தந்து வைத்தியம் செய்தனர். இதனால், ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளானார்.

1945-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவில் இருந்து
வெளியேறிய பின் ஆங்கிலேயர்கள் மலாயாவில் ஆட்சி அமைத்தனர். கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவை சிறையிலிருந்து மீட்டு இங்கிலாந்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். சித்திரவதையும் கடுமையான உடற்சிதைவு காரணமாகச் சிபில் சில நாட்களிலேயே மரணமடைந்தார்.

அவருடைய நல்லுடல் ஸ்காட்லாந்தில் புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் பூதவுடல் சமாதியிலிருந்து 20.3.1949-ல் தோண்டி எடுக்கப்பட்டு, கப்பல் வழியாகப் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்டு ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டது. சிபில் கார்த்திகேசுக்கு மனப்பூர்வமான வணக்கத்தைக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

முன்னதாக சிபில் தனது கிளினிக்கை வைத்திருந்த இடத்தை தோழர் நாகேந்திரன் காட்டினார். தற்போது அது யாருடைய உடையாகவோ மறுசீரமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. சிபிலின் வரலாற்று குறிப்பில் அந்த கிளினிக் இனி மெல்ல மறைக்கப்படலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக