நான் வரைபவனின் மனைவி
வரைபவனின் மனைவியை
வரைபவனின் மனைவி என்றே அழைக்கிறார்கள்
அதைத்தவிர வேறு அடையாளங்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcrWBVGs9Wzm9Do_CwHJ4LJiHa_bEeOdd5XqvvVgSnlsfypvBcskkr5iSWDJdiLZ403al2ohpfqqKFifwyn04TwrlHHo9AzekNz2zTb9C85BgKiShAjarG-SkGuMH9k2FpqXr6y_7JoQU/s1600/self-portrait-with-painters-wife-yiannis-moralis-1943-1366041015_b.jpg)
வரைபவனின் மனைவி
கவிதை வரைகிறாள்
நடனம் ஆடுகிறாள்
பாடல் இசைக்கிறாள்
உணவு சமைக்கிறாள்
புதிர் போடுகிறாள்
நூதனமான சில விஷயங்களை
அசாட்டையாகச் செய்கிறாள்
இருந்தபோதிலும்
வரைபவனின் மனைவியாகவே
அவள் அறியப்படுகிறாள்
தன் அடையாளத்தைக் குறித்து
அவள்
சில சமயம் அமைதிம் இழக்கிறாள்
வரைபவனின் தூரிகைகள்
பாம்பாய், புழுவாய், புல்லாய், மண்ணாய்ப்போக
கனவு காண்கிறாள்
வர்ணங்கள் வர்ணம் இழக்கச் சாபமிட்டுக்
வரைபவனிம் மனைவி
கனவை கரைக்கிறாள்
அடையாளம் என்ற ஒன்றுக்கு
அடையாளம் என்பதைத் தவிர
வேறென்ன இருக்கிறது
என்று குறிப்பு எழுதிவைத்து
உணர்ச்சியற்று நாட்களை நகர்த்துகிறாள்
நான் இன்னும் வரைபவனின்
மனைவியாகவே இருக்கிறேன்
-யோகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக