திங்கள், 6 அக்டோபர், 2014

பேய் வேஷம் போட்டவள்

கவிதை


பேய் வேஷம் போட்டவள்

நேற்று நான் பேய் வேஷம் தறித்திருந்தேன்
ஒரு கால் இழந்து...
இழந்த காலை
கையில் ஏந்திக்கொண்டு
கோரமான அருவருப்பான  பேயாக
நான் இருந்தேன்

தொண்டை கிழிய
பேயாகி கத்தியதில்
 பலர் பயந்தனர்,
பலர் நகைத்தனர்
பலர் பயப்படாதைப்போல் நடித்தனர்

தொடர்ந்து சில மணி நேரத்திற்கு
பேயாக  இருந்ததில்
எனக்கு பேயின் தன்மைகள்
இயல்பாகப் புரியத்தொடங்கின

பேய் காரணமில்லாமல்
ஒருவரை பயமுறுத்துகிறது
பேய் இருட்டையே விரும்புகிறது
பேய் சிறுவர்களையே
அதிகம் கலக்கமடையச் செய்கிறது
முக்கியமாக பேய் வேஷம் தறித்து
பேயாட்டம் ஆடுகிறது

-யோகி

1 கருத்து: