புதன், 15 அக்டோபர், 2014

அந்த முகம்

அந்த முகம்

உனக்கே தெரியாத உன்
முகத்தை
ஒரு முறை நீ என்னிடம் காட்டினாய்
மனப்பூட்டுகளை உடைத்துக்கொண்டு
நீ என்னுள் நுழைந்ததும் அப்போதுதான்

பயமும் அமைதியும் அலங்காரங்களன்றி
என்னை உனக்கு
அறிமுகம் செய்துவைத்ததை
நீ மறந்திருக்க மாட்டாய்

இனிப்பு நிறைந்து
கசப்பு கொட்டிய நாள்களும்
சிரிப்புத் தீர்ந்து
கண்ணீர் வெடித்த பொழுதுகளும்
தெளிவாகவே இருக்கின்றன
நம்மைப்போல்

இது சாத்தானை மிஞ்சிய காதல் என்றாய்
கடவுள் ஆசிர்வதித்த கலவி என்றாய்

அதன் பிறகு
உனக்கே நீ காட்டிக்கொள்ளாத
அந்த முகத்தை
மீண்டும் நான் காணவே இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக