புதன், 26 நவம்பர், 2014

என்ன செய்வதென்றுதான்

அம்மா விட்டுச் சென்ற புடவையில்
எப்போதாவது ரோஜாக்கள் பூக்கும்
வண்ணத்துப்பூட்சிகள் முண்டியடிக்கும்
மகரந்தச் சேகரிப்புக்கு
புடவையின் வர்ணம் மாறி மாறி
மாயாஜால வித்தை காட்டும்
பரதேசி ஒருவருக்கு அம்மா உணவளித்ததை
ஒருநாள் அவரின் முந்தானையில் தெரிந்தது

அம்மாவின் புடவையைப்
பற்றிய பயம்
 மனத்தில் வந்து வந்து போனது
சூத்திரக்காரி நெய்த புடவையாக
இருக்கக்கூடும்
என நினைத்துப் புடவையை
எரித்துவிட்டேன                                                                                                                                ஆனால்
பயத்தை என்ன செய்வதென்றுதான்
 இப்போது புரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக