செவ்வாய், 18 நவம்பர், 2014

எனக்கு நான்



அத்தியாயங்கள் என்னைப்
பலவாறாக கிழித்துப்போட்டிருந்தன
குழந்தையில்,
சிறுமியில்,
குமரியில்,
திருமதியில்- என
அத்தியாயங்கள் கிறுக்கப்பட்டு
மிகவும்
விகாரமாகப்
பயமுறுத்தியிருந்தன

கொஞ்சம் பாசம்
அதிகமான கண்டிப்பு
அர்த்தமில்லாத அர்த்தங்கள்
கொஞ்சம் ஆசிர்வா(வ)தம்
மற்றும் ஏகப்பட்ட முரண்களுடன்
எழுதிவிட்டிருந்த அத்தியாயங்களில்
ஒரு பைத்திய நிலைக்குப் போயிருந்தேன்

நிறைவு அத்தியாயத்தை
நல்ல வேளையாக எழுதிவைக்கவில்லை
நானே அவ்வத்தியாயத்தை எழுதிவிட்டு
முன் அத்தியாங்களை மௌனமாக
கிழிக்க துவங்கினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக