செவ்வாய், 11 நவம்பர், 2014

உலக வரைபடத்தில் ஒரு கண்ணீர்த்துளி




 
சாத்தான்
ஆசிர்வதித்து அனுப்பிய பெட்டியில்
ஒரு நாட்குறிப்பு இருந்தது

நாள் குறிப்பின்
ஒரு பக்கத்தில்
தேவதைகளில் அழிவைப்பற்றி குறிப்பிட்டிருந்தது

அடுத்த சில பக்கத்தில்
கடவுள்களின் துர்மரணங்களை சித்தரித்திருந்தது

அடுத்தடுத்த பக்கங்களிலும்
சாத்தான் அழிவுகளையே கோடிகாட்டியிருந்தது

அழிவுகளின் ஓலங்களை தாளமுடியாமல்
நாட்குறிப்பை மூடும்போது
மனிதமும் அழிந்திருந்தது

நாட்குறிப்போடு சாத்தான்
பிணங்களையும் பெட்டிக்குள் கிடத்தி
போதி மரத்தின் கீழ் புதைத்தது

பிறகு சிரித்து
எது நடந்ததோ

அது சரியாகத்தான் நடந்தது என்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக