ஒரு கவிதைக்காக பல மாதமாக முயற்சித்து வருகிறேன் திடீரென ஒரு கவிதை நடுநிசியில் உதிக்க அதன் வரிகளை என் போர்வையின் அடியில் எழுதி வைத்தேன் காலையில் போர்வையில் தேடினால் கவிதை வரிகள் கட்டிலில் சிதறிக் கிடந்தன கனவுகள் சொற்களை கலைத்துப் போட்டிருக்கலாம் வரிகளை அடுக்கி கவிதையைத் தேடலானேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக