திங்கள், 1 டிசம்பர், 2014

பிறிதொரு நாள்

பிறிதொரு நாளில்
பிறிதொரு நாளையைப் பற்றிய
கவிதை எழுத
மனம் எத்தனித்திருந்தது
அதற்கு பிறிதொரு காலமும்
பிறிதொரு நேரமும் தேவைப்பட்டது
தருணம் தோய்ந்த பிறிதொரு நாளில்
அக்கவிதையை எழுதத் தொடங்கினேன்
கவிதை நீண்டு
பல பிறிதொரு நாட்களை
விழுங்கியது
கவிதையை முடித்து
அடியில் என் பெயரை எழுதிட
அந்தப்
பிறிதொரு நாள்
இன்னுமும் வாய்க்காமலே உள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக