செவ்வாய், 9 டிசம்பர், 2014


அந்த கதவு

சிலநாட்களுக்கு முன்பு
திறந்த  கதவு
ஏனோ மீண்டும்
சாத்திக்கொண்டது
சாத்திக் கொள்வது 
கதவின் குணம்
நம்பிக்கையை வளர்த்துக்கொண்டதில்
கதவின் குற்றம் என்ன இருக்கிறது
நான் பார்த்திராத, தொட்டிராத
அந்தக் கர்பனைக் கதவு
சாத்திக்கொண்டது மட்டும்
கர்பனை அல்ல

கதவுகளே இல்லாத
ஒரு வீட்டை அமைப்பதும்
சாத்தியமில்லைதான்
நான் கனவு காண்கிறேன் என்
தார்மீகச் சாம்பல் சுமையுடன்என்ற
பாப்லோ நெரூடாவின் வரி
எங்கிருந்தோ எனக்குக் கேட்க தொடங்கியது
-யோகி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக