ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அவள்... 5

இன்று எனது வெற்றிடத்தில்
ஒரு தும்பி வந்தமர்ந்தது
சிவப்பு நிற தும்பி அது
செம்பனை தோட்டத்தின்
வாசம் கமழக் கமழ
அங்குதான்
தீராத ஆசைகளுடன்
சுற்றி திரிந்துகொண்டிருப்பதாக
தும்பி கூறியது
கனவின் கோர பற்களைப்
பற்றி தும்பிக்கு தெரிந்திருக்கவில்லை
அதன் குரல்வளை
நெறிக்க படுவதைப் பற்றியும்
அதன் மெல்லிய இறக்கை
பிடுங்கப்படுவதைப் பற்றியும்
அதன் நிறம் மாறி இருப்பதைப்
பற்றியும்
தும்பி அறியவில்லை...
பாவம்
அது வந்து அமர்ந்த
அந்த வெற்றிடம்
அறுக்கப்பட்ட
ஒரு பெண்ணின்
இதயம் என்றும்
தும்பிக்கு தெரியவில்லை
தும்பிக்கு சொல்லவதற்கு
என்னிடத்தில்
ஒரு செய்தியும் இல்லை
இதை எல்லாம் கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்த
மீனை நோக்கி
முதல் கல்லை
எறிந்தேன் நான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக