ஞாயிறு, 26 ஜூன், 2016

கெர்த்தேவின் மடியில்

 மலேசியாவைப் பொறுத்தவரை எந்த ஓர் இயற்கை அனத்தங்களும் பெரிய பாதிப்பை கொடுத்திவிடுவதில்லை. நிலநடுக்கம், வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் பெரிய சேதத்தை ஏற்படுத்தாமல்  முகவும் பாதுகாப்பாக மலேசியா அமைந்திருக்கிறது. அணையாக நிற்கும் அண்டை நாடுகளை அதற்கு காரணமாக சொல்லலாம். வரும் பெரிய  ஆபத்துகளிடமிருந்து  மலேசியாவை தற்காத்து  வடிகட்டி மிச்சத்தையே அனுப்புகின்றன.

மலேசியாவில் இயற்கை அழகுக்குப் பஞ்சமே இல்லை. மலைகளும், நேரத்தையுன் காலத்தையும் கணிக்க முடியாமல் பெய்யும் மழையும், வனங்களும்,  200-க்கும் அதிகமான  பச்சை வர்ணங்களையும் இங்கே காணலாம்.   வேறு எந்த இடத்திலும்பார்க்க தவறிய  இயற்கை அழகை நீங்கள் மலேசியாவில் பார்க்கலாம். தன்னை மறைத்து வைத்து, நாம் எதிர்பார்க்காத நேரத்தில்  வெளிப்படுத்தி அதன் அழகில் மயங்க வைக்காமல்  அது விடாது.

எல்லா இயற்கை அழகையும் ஒரே இடத்தில் பார்க்ககூடிய  தோற்றம் சில இயற்கை வளங்களுக்கு உண்டு. அப்படியான ஓர் இடம்  திரெங்கானு மாநிலத்திலுள்ள கெர்த்தே எனும் இடத்திற்கும் உண்டு. பெட்ரோனாஸ் நிறுவனம் ஒரு முறை பத்திரிக்கை நிமித்தமாக ஏற்பாடு செய்திருந்த அந்தப் பயணத்தில் நான் கலந்துகொண்டேன்.
திரெங்கானு மாநிலத்தில் மேம்பாடு அடைந்து வரும் இடங்களில் கெர்த்தேவும் ஒன்று. மாலை மங்கும் அந்த மஞ்சள் வெயில் படரும் நேரத்தில் கெர்த்தேவை காண வேண்டும். காண்டா மரங்களின் வாசமும், ஈர மண்ணின் வாசமும் கலந்து பறவைகளின் ஒலியோடு நம்மை மயக்கி சாய்க்கிறது.

காடுகளை அழித்து EcoCare எனக் கதைவிட்டுத்திரியும் பெருநிறுவனங்களைக் கண்டால் அத்தனை எரிச்சலாக இருக்கிறது. தொடர்ந்து அதன் கிளைநிறுவனங்கள் நிறுவுகிறோம் எனும் பேர்வழிகள் இயற்கையை அழித்துதான் அதற்கான அலுவலகங்களை அமைத்துக்கொடிருக்கிறார்கள். நான் மீண்டும் கெர்த்தேவுக்கே வந்து விடுகிறேன்.

அதுபோல ஒரு EcoCare திட்டம் பெட்ரோனாஸ் கிமிக்கல் நிறுவனமும் செய்துவருகிறது. இந்தத் திட்டத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்திலிருந்தே கெர்த்தே வட்டாரத்தில்தான் பெட்ரோனாஸ் கெமிக்கல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து வெளியாகும் இராசயனங்கள் கெர்த்தே ஆற்றையும் அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளையும் சேதப்படுத்தி வந்தன. ஒரு கட்டத்தில் இதன் தீவிரம் அறிந்து கொண்ட நிறுவனம், தம்மால் ஏற்படும் இயற்கை சீர்கேட்டை சரிசெய்ய அல்லது அதன் தீவிரத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் EcoCare திட்டத்தைத் தொடங்கியது. இது இயற்கையோடு ஒன்றிச் செயற்படவிருக்கும் திட்டம் என்பதால் பெட்ரோனாஸ் கெமிக்கல் நிறுவனம் இம்முயற்சியை ‘மலேசிய இயற்கையை நேசிப்போர் சங்கத்தையும் (Malaysian Nature Society ) இணைத்துக் கொண்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாகக் கடந்த 2005-ஆம் ஆண்டு, கெர்த்தே நதியைச் சுற்றி இருக்கும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு ஆற்றின் ஓரத்தில் இருக்கும் வனமரங்கள், இயற்கை வளங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றையும் பாதுகாக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுச் செயற்முறைக்கும் வந்தன.

இந்தப் பயனுள்ள திட்டத்தில் அவ்வட்டாரத்தில் சுற்றியிருக்கும் சிறுசிறு கம்பங்களான கம்போங் தெலாகா பாபான், கம்போங் தெங்ஙா மற்றும் கம்போங் கெலுகோர் ஆகிய கிராமங்களில் வசித்த கிராமத்து மக்களைச் சந்தித்துப் கலந்துப் பேசி இத்திட்டத்தை இன்னும் வலுப்பெறச் செய்ததுடன் தன்னார்வலர் முறையில் ஒரு குழு அமைத்து வனத்தையும் ஆற்றையும் பாதுகாக்கும் திட்டத்தை வெற்றியடையச் செய்துள்ளனர்.


இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாகச் சுற்றுச்சூழல் கல்வி மையம் (EcoCare Environmental Education Centre) தொடங்கப்பட்டது. தீபகற்ப மலேசியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்வி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தை மாநில சுல்தான் திறந்துவைத்து இதன் முக்கியத்துவத்தைக் குறித்த பார்வையை மக்கள் பக்கம் திரும்பினார். சதுப்பு நிலக் காடுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அதனால் இயற்கை சீற்றத்துட்டன் இருந்து மக்கள் எவ்வாறு பாதுகாக்கப் படுகின்றனர் என்பதையும் இந்தக் கல்வி மையம் பரப்புரைச் செய்யத் தொடங்கியது. 

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக