செவ்வாய், 19 ஜனவரி, 2016

மரண தண்டனை கைதியின் இறுதி நாள்

புத்தக விமர்சனம்
எழுதியவர் : விக்தோர் ஹ்யூகோ
மொமிழில்: குமரன் வளவன்
பதிப்பகம் : கிரியா















ஒரு மரணம் காத்திருக்க வைக்குமா?மரணம் பற்றி பேச தொடங்கிவிட்டால் எமதர்மன் பாசக்கயிறோடு நிற்பது போல சிலருக்கு 
எண்ணம் தோன்றுவது ஏன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லைசின்ன வயதிலிருந்தே என்னை பாதித்த மரணங்கள் என்னை 
பண்படுத்தியிருக்கு என்றுதான் சொல்வேன். எனக்கு ஒரு வயதாக இருக்கும்போது தொடரத் தொடங்கிய உயிர் இழப்புகள்,  எனக்கு விவரங்கள் தெரிய தெரிய மிக நெருக்கத்தில் உடன் அமர்ந்து அளவளாகும் வரையில் பிந்தொடர்ந்துகொண்டிருக்கின்றன
 
18 வயதில் என் அப்பாவின் மரணம் என்னை மனப்பிறழ்வு வரை கொண்டுச் சென்றது என்றால், 21 வயதில் சந்தித்த  அப்துல் கனி என்ற  மலாய் தோழனின் மரணம் என்னை அந்த நிலையை 
மீண்டும் நினைவுபடுத்தியதுபின்எந்த மரணமும் என்னை பாதிக்காமலே போனது. நான் நிருபர் ஆனப்பிறகுமரணத்திற்கும் எனக்குமான உறவு இன்னும் தீவிரமானது என்று சொல்லலாம்கொலைச் சம்பவங்கள்முதல் விபத்து வரை சில மரணங்களை ரத்தமும் சதையுமாக ஈரத்துடன் பார்த்து பார்த்து மனது மறுத்து போய்விட்டது என்றே நினைத்திருந்தேன்
ஒருமுறைசிமந்து லாரியில் விபத்தில் சிக்கின ஒரு பெண்மணியின்
 உடல் இரண்டாய் போக அதை பக்கத்தில் இருந்து டிசைன் டிசைனாக படம் எடுத்த பேர்வழி நான்அவளின் இதயம் தனியே விழுந்து கிடக்கஅதை பழைய நாளிதழ் கொண்டு மூடிவிட்டுமிதித்துவிடாதே அவளின் இதயம்இருக்கிறது என்று கூறிச் சென்ற போதுஅங்கிருந்த பெண் ஒருவர் மயக்கம் போடாத குறையாக 
அங்கிருந்து விலகி போனதை நான் இன்னும் மறக்கவில்லை
 
என் இதயத்தில் ஈரம் எங்கே போனது?  நான் பயந்தவள் தானே?  ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு துண்டில் சுற்றி தூக்கி வந்த ஓர் ஊழியனுக்கு மருத்துவம் பார்க்க முடியாது என சொல்லிய ருத்துவமனையிலிருந்து சொல்லாமல் வேலையை விட்டு வந்தபோது நான் அத்தனை இரக்கம் உள்ளவளாக இருந்தேனே

இப்போது அப்படி எதுவும் இல்லைகொடூரச் சம்பவங்கள் என்பது நிருபர்களின் திறமைக்கு 
கிடைக்கும் வாய்ப்பு.  சம்பவத்தை அந்த நிருபரோ அல்லது புகைப்படக்காரோ எப்படி படம் 
எடுக்கிறார்எப்படி துப்பு துலக்குகிறார்எவ்வாறான ஆரூடங்களை வெளிப்படுத்துகிறார்
என்பதை,வைத்து  ஒருசெய்தியை தேசிய அளவில் பரபரப்பாக்கக்கூடிய திறமை ஒரு 
நிருபருக்குரியது
 
இதில் நிருபரின் உளவியலையோ அவரின் மனநிலையையோ யாரும் பார்ப்பது இல்லைபார்க்கவேண்டிய அவசியமும் இல்லைபோட்டி நிறைந்த பத்திரிகை உலகம் குதிரை பந்தயம் மாதிரிதான்இன்று எந்தக் குதிரை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை முதல் பக்கச் செய்தியில் வாசகர்கள் முடிவு செய்கிறார்கள்ஐயையோ!அச்சச்சோசெய்திகளுக்கு இப்பவும் முதலிடம்தான்அம்மாதிரியான செய்திகள் 6 நாளிதழிலும் (மலேசியாவில் 6 தமிழ் தினசரிகள் உள்ளன) வந்திருந்தாலும்எந்த நாளிதழில் சன்பவம் குறித்த படம் நல்லா வந்திருக்கிறது என்று பணம் கொடுத்து வாங்கும்  ஒரு வாசகன்  முடிவுசெய்கிறான்.

 6 நாளிதழிலும் ஒரே படம்தான் வருகிறது என்றாலும் பக்க வடிவமைப்பில் அந்த படம் 
எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பொறுத்து எந்த  நாளிதழை வாங்கலாம் என்று  வாசகன் தேர்வு செய்கிறான்மிக மிகக் கொடூரமான ரு படம்சிலர் கதறிக் கதறி அழும் காட்சி இப்படியான செய்திகள் தலைப்புச் செய்தியாக்குவது வாசகனுக்கு தகவல் சொல்வதற்காக ட்டுமல்லபத்திரிகை நிர்வாகம் பொறுத்தவரையில் வாசகனுக்கு தகவல் சொல்வது என்பது இரண்டாவது 
விடயம்தான்முதல் பக்கம் செய்தி என்பது பத்திரிகை விற்பனை சம்பந்தப்பட்ட ஒரு குதிரை பந்தயம். 
 
மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்’ என்ற பிரபல எழுத்தாளர்  
விக்தோர் ஹ்யூகோ எழுதிய புத்தகத்தைப் படித்தப் பிறகு மரணம் குறித்த பாதிப்பு  குறிப்பாக மரண தண்டனை கைதியைக் குறித்த பாதிப்பு எனக்குள் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை

இந்தப் புத்தகத்தை படித்த காலக்கட்டத்தில்தான் புரம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்ற 
படத்தையும் பார்த்தேன்உண்மையில் இந்த இரண்டு விஷயங்களும் வெவ்வேறு காலக்கட்டத்தில் எனக்கு அறிமுகமாகியிருக்கலாம்.  எனக்கு ஒரே நேரத்தில் அறிமுகமான இந்த  இரண்டு  விஷயங்களும் மிகநூதனமான 
உளவியல் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது
 
இதில் திரைப்படத்தைப் பற்றி நான் எதுவும் பேசப் போவதில்லை.  பலபேர் அது குறித்து பிரித்து, ஆராய்ந்துவிட்டனர்புதிதாக சொல்வதற்கு என்னிடம் எதுவும் 
இல்லைஆனால்இந்தப் புத்தகம் குறித்து பேசுவதற்கு நிறைய இருக்கிறது

இந்தப் புத்தகத்தின் பாதிப்பை கடக்க முடியாத ஒரு தருணத்தில், சுங்கத்துறையில் அதிகாரியாக இருக்கும் எனது தோழர் விக்கினேஸ்வரனிடம் பேசினேன். மலேசியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நிபுணவாதிகள் 12 பேர் இருக்கிறார்கள் என்றார். அதுவரை நான் அறிந்திடாத தகவல் அது. தூக்கு தண்டனை நிறைவேற்றும் நிபுணத்துவவாதிகளில் ஒருவரான கிளந்தானைச் சேர்ந்த மலாய்க்காரரைச் சந்திக்க நேர்ததாகவும், அவரின் அனுபவம் இன்றுவரை மறக்க முடியாததாகவும் தெரிவித்தார். 

விக்கி சந்தித்த அந்த நபருக்கு கழுத்து நிறைய அடர்த்தியான மருபோன்ற தசை இருந்ததாக தெரிவித்தார்.  மரணதண்டனை குறித்து அந்த மலாய்க்காரர் தெரிவிக்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் அனைவருக்கும் இப்படி ஏதாவது  இழைக்கப்பட்ட ஒரு  சாபம் பின்தொடர்கிறது என தெரிவித்ததாக தெரிவித்தார்.

"மரண தண்டனைஏன் கூடாதுமனிதர்கள் அனைவரும்தொடர்ந்து ஒத்திப் போடப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான்" என்று 
புத்தகத்தின்  மூன்றாம் அத்தியாயத்தில் நேரடியாக நாம் மரண தண்டனைக் கைதியின் 
வாழ்க்கையில் நுழைவோம்ஆனால்அதன் தொடக்கத்திலிருந்து  நாம் தொடர்ந்து மரண 
ண்டனை கைதியின் வேதனையை அனுபவிக்கும்படி ஆகிவிடுகிறதுதுலோன் நகரத்திற்க்ச் செல்லும் கைதிகளுக்கு சங்கிலியிடும் சடங்கு 
மிகக்கொடூரமானதாகவும் கொடுமையானதாகவும் இருந்தாலும் அது ஒன்றே சக கைதிகளின் கேளிக்கையாகவும் இருக்கிறதுஅந்தக்காட்சியை ஓர் அழகியல் என விவரிக்கும் பாணி நம்மை கொடூரமான இறுக்க நிலைக்கு தள்ளிவிடுகிறது
 
இதுபோல பல இடங்களில் வாசகனின் ன நிலைக்கும் மன ஓட்டத்திற்கும்  தடையாகவும்அந்த இடத்தைக் கடக்க சிரமப்படும் நிலையும் இந்தப் புத்தகம் ஏற்படுத்தியது
 
18-ஆம் அத்தியாயத்தில் தூக்கு ண்டனைக்குக் காத்திருக்கும் கைதியின்  நாள்  மிக நெருங்கி விட்டதை நமக்கு தெரிவிக்கும்அதுவரையில்  முன்பைவிடவும் அவனுக்கு சிறை அதிகாரிகள் கூடுதலாக 
கொடுக்கும் மரியாதை  மிக பீதி நிறைந்ததாக நகர்கிறது. ஒரு கட்டத்தில்  தாம் இருக்கும் சிறையைப்பற்றி கதைச்சொல்லி இவ்வாறு விவரிக்கிறார்

"என்னைச் சுற்றி எல்லாமே சிறைதான்;  ஒவ்வொரு உருவத்திலும் சிறையைக் கண்டேன்
மனிதன் வடிவத்தில் அல்லது தாழ்ப்பாள் வடிவத்தில்
இந்தச் சுவர்கல்லால் ஆன சிறைஇந்தக் கதவுமரத்தால் ஆனச் சிறைஇந்தச் சிறைக் 
காவலாளிகள்தசையாலும் எலும்பாலும் ஆன சிறை. சிறை என்பது முழுமையான
பிரிக்கப்பட முடியாதபாதி கட்டடமும் பாதி மனிதனுமான ஒருவித பயங்கர உயிரினம். நான்தான் அதன் இரை."
 
இப்படியாக சிறை விவரிக்கப்படும் போது ஒரு வாசகன் என்பதைத் தாண்டி  நாமும் அந்த 
உணர்வை உள்வாங்கக் கூடிய நிலை ஏற்படுகிறதுசில  சமயம் தூக்குத் தண்டனை கைதியாக  வரும் கதைச் சொல்லி தமக்கு மன்னிப்பு கிடைக்கும்தலை துண்டாடலில் இருந்து தமது தலை தப்பிக்கும் என்ற நம்பிக்கை நமக்கு கொடுக்கும் போது ஏற்படும் உணர்வு வேறுமாதிரியானதுஇந்த எழுத்து நடையை நான்  விக்தோர் ஹ்யூகோவின் வெற்றியாகவே பார்க்கிறேன்.   
 
தூக்குத் தண்டனைக் கைதியை சந்திக்கும்  பாதிரியார் குறித்து இறுதி  அத்தியாயம் வரை பேசப்பட்டாலும் பல இடங்களில் அது சுவாரஸ்யம் கூட்டுவதாக எனக்கு இல்லை. ( என்னுடையவாசிப்பு நிலைக்கு இப்படி தோன்றினாலும்பிறருக்கு வேறுமாதிரியான கருத்து இருக்கலாம்.)
 
புத்தகத்தின் 21- வது அத்தியாயத்தில் மரண தண்டனை பெறப்போகும் கதைச் சொல்லியின் 
மரண நாள் தொடங்குகிறது. ஒருவித  சம்பிரதாய சோகத்துடன்  நீதிமன்ற  பணியாளன் ஒருவர் வந்து 
"தீர்ப்பு இன்று க்ரேவ் சதுக்கத்தில் நிறைவேற்றப்படும்"  என்ற கடிததத்தை வாசிக்கிறார்இதற்கு முழு மனதுடன் ஒத்துழைப்பீர்களா ? என அவர் கேட்க "நீங்கள் விரும்பும் போது நான் தயார்என கைதி பதில் அளிக்கிறார்.  பின்பல இடங்களில் மரணத்தின் வன்மத்தையும் கொடூரத்தையும் நிலை கொள்ளாமல் கைதி அனுபவிக்கும் காட்சிகள் நம்மை ஒரு பித்து நிலைக்குச் செல்ல வைக்கக்கூடியது

கைதியின் இறுதி நாளில் அவனின்  செல்லக் குழந்தை மரியை  சிறைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்கிறாள். அவளை தழுவ, அணைக்க, முத்தமிட  அவள் அனுமதித்தாலும், அச்சத்தோடு அழுதுக்கொண்டே வேலைகாரியை பார்த்தவண்ணம் இருக்கிறாள் மரி. அவளை இறுக்கமாக அணைக்கிறான். விடுங்கள் ஐயா என மிரல்கிறாள் மரி.  
"ஐயா வா? என திடுக்கிடுகிறான். ஆம். தன் தந்தையைப் பார்த்து ஒரு வருடமான  மரி அவனை அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. 

"மரி என்னை தெரியவில்லையா?" 
"தெரியவில்லை"
"  நன்றாகப்பார்.. என்னை தெரியவில்லையா?"
"தெரியும் !  யாரோ"  என்கிறாள். 
" உனது அப்பா எங்கே"
"உங்களுக்கு தெரியாதா? அவர் செத்துப்போய்விட்டார்"

இப்படியாக தந்தைக்கும் மகளுக்குமான உரையாடல் நீல்கிறது. எல்லா இடத்திலும், அவந்தான் அவளின் தந்தை என்பதை வழியுறுத்த மெனக்கெடுகிறான். ஆனால், மரியோ தனக்கு சம்பந்தமில்லாத ஒருவரிடம் இருப்பதாக நினைத்து பேசிக்கொண்டிருக்கும் அந்த உரையாடல் விரத்தியின் உச்சம் எனலாம். 

 
“ஓ கடவுளே ! நான் இப்போதே தப்பிக்க வேண்டும்என் தசைகள் அந்த மரத் துண்டுகளிடையே சிக்கிக்கொண்டாலும்  கூட பரவாயில்லை” என மரண தண்டனைக்  கைதி  மரணத்தோடு 
மன்றாடுவதுமரணம் எனும் பிசாசுடன் சிக்கித் தவிக்கும் இம்மாதிரியான வசனம்  இன்னொரு இடத்திலும் வரும்.. 
"என் மகனே நீ தயாராஎன்று கேட்டார்.
 வலிமையற்ற குரலில் நான் பதிலளித்தேன்.
"நான் என்னை இன்னும் ஆயத்தப்படுத்திக்கொள்ளவில்லை.
ஆனாலும் நான் தயார்
என் கண்கள் கலங்கினகை கால்களிருந்து குளிர்ந்த வியர்வை வெளியேறியதுஎன் நெற்றிப் பொட்டு வீங்குவது போல் தோன்றியதுஎன் காதுகள் முழுதும் வண்டுகள் மொய்க்கும் சத்தம்...
 
இந்த வரிகளைத் தொடர்ந்துஎன்னால் இந்த புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்க 
முடியவில்லைபுத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டேன்வண்டுகள்  சத்தமிடுவதை 
நிறுத்த முடியவில்லைமீண்டும் அந்த புத்தகத்தின் வாசிப்பைத் தொடர 
வேண்டுமா என்ற கேள்வியோடுதான் வாசிப்பை தொடர்ந்தேன்எனது வாசிப்பின்  ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் தேடியதுஎதற்காக அவருக்கு மரண தண்டனை 
விதிக்கப்பட்டது என்றுதான்அவரின்  சின்னக் குழந்தை மரியைப் பற்றி பல இடங்களில் 
பேசுகிறார் என்றாலும் மரண தண்டனை பெறும் அளவுக்கும்,  அவர் குழந்தையை பிரியும்  
அளவுக்கும் செய்த குற்றம் எனன?  மன்னிக்க முடியாத குற்றமா அது?  மன்னர் நினைத்தால் தமக்கு மன்னிப்பு வழங்கலாமே என்றும் கைதி மன்றாடுகிறார்நமது மனசாட்சியானதுஅவருக்கு மன்னிப்பு கிடைக்காதா என்று ஏங்கத் 
தொடங்குவதோடுகைதியின் பின்னாடியே அலையவும் தொடங்குகிறது

இப்படியாக நான் புத்தகத்தை படித்து முடிக்கும் போது மரணதண்டனைக்  கைதியின் இறுதிநாள் முடிந்திருந்தது.  

இந்தப் புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பாளரான  குமரன் வளவன் பின்னுரையில் விக்தோர் ஹ்யூகோ குறித்து தெளிவான விளக்கத்தை தந்துள்ளார்.  ஓர் இடத்தில் மரண தண்டனை பெற்ற ஒருவன் சிறையின் அடைக்கப் பட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மனிதத் தன்மையை இழந்து, ஒரு ஜடமாக, ஒரு இயந்திரமாக அதே சமையத்தில் சிறை ஒரு மிருகம் போல் அவனை உருமாற்றுகிறது. அவன் எழுதும்போது 'நான்' என்ற சொல்லைவிட 'என்னை' என்ற சொல்லத்தான் அதிகம் பயன்படுத்துகிறான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நாவல் முழுதும் ஒரு உலோக மிருகம் மரண தண்டனை கைதியை விடாமல் பின் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மிருகம் இந்த நாவல் வாசிப்பாளனை பின் தொடர்கிறது என்பதுதான் உண்மை. 

(யோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக