புதன், 24 பிப்ரவரி, 2021

நிரந்தரமாக உறங்கியது ஓவியர் ஜெகன்நாத்தின் தூரிகை


பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை...

இறுதி யாத்திரைக்கு கொண்டு செல்லும் முன், வைரமுத்துவின் இந்த வரிகளை  சடங்கு செய்பவர் பாடும்போது, மன இறுக்கத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.  கடந்த 9 ஆண்டுகளில் நான் 3 முறை அவரோடு உரையாடி இருக்கிறேன். இந்த நேரத்தில் அவரை சந்தித்துப் பேசிய பொழுதுகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்துக்கொண்டிருக்கிறது. மனம் தவித்தப்படியே அலைகிறது. அவர் போயிருக்கும் வேறொரு உலகமும் வண்ணங்களால் அவரை ஆராதிக்கும். பூ தூவி வரவேற்கும். ஆனால், இங்கே அவரின் வெற்றிடத்தை யாரால் நிரப்பமுடியும்?

இந்தக் கோவிட் காலகட்டத்தில் மரணம்  வேதனையான ஒன்றாக மாறியிருக்கிறது. மனைவியும் மகளும் இந்தியாவில் இருக்க, உடன்பிறப்புகளும், நண்பர்களும், தன் ஓவிய மாணவர்களும் இறுதி அஞ்சலி செலுத்திட தன் இறுதி யாத்திரியை முடித்துகொண்டார் அந்த மாபெரும் ஓவியர்.

ஓவியர் ஜெகன் குறித்து எனது முந்தய பதிவு...

https://yogiperiyasamy.blogspot.com/2016/05/blog-post_60.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக