சனி, 20 பிப்ரவரி, 2021

பூர்வீக நிலத்தை பறிகொடுத்த 'செமெலாய்' பூர்வக்குடிகள்

தொடர்ந்து அதிகார வர்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் பூர்வக்குடிகள். இம்முறை அவர்களின் பணப்பசிக்கு இரையாகியிருப்பது செமெலாய் பூர்வக்குடிகளின் பூர்வீக நிலம்.

 சிலநாட்களுக்கு முன்பு (16/2/2021) மலேசியகினி வெளியிட்ட இச்செய்தி குறித்து யாரும் பெரிதாக கவலைக்கொள்ளவில்லை. அக்கரையும் கொள்ளவில்லை. பஹாங், பெராவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்த அவர்களின் பூர்வீக நில வழக்கில் அவர்கள் தோல்வியை தழுவிவிட்டனர் என்று அவர்களின் வழக்கறிஞர் அஹ்மாட் நிஜாம் ஹமிட் தெரிவித்தார். அந்த மக்களின் ரத்தமும் சதையுமாக இருங்க இந்த வனம் தற்போது செம்பனை தோட்டமாக மாறுவதற்கு தனியார் கைக்கு போய்விட்டது.  
 
655 ஹெக்டர் நிலம் சுமார் 100 ஆண்டுகள் குத்தகைக்கு Elite Agriculture Sdn Bhd என்ற தனியார் நிறுவனத்திற்கு திரும்பவும் கைமாறுகிறது.  செமெலாய்  ஒராங் அஸ்லி சமூகம் கம்பாங் லுபுக் பெராவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் ஆறு தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாகவும், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் கூறுகின்றனர். தவிர இந்தக் கிராமம் ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையால் (ஜாக்வா) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இருப்பினும் பூர்வக்குடிகளின் வாழ்க்கையா அல்லது பணமா என்று வரும்போது, வெல்வது பணம் மட்டும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக