சனி, 7 மே, 2016

உப்பு நாய்கள்




புத்தகம்: உப்பு நாய்கள்
எழுதியவர்: லஷ்மி சரவணகுமார்
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : 220 ரூபாய்
எனதினிய நண்பர் லஷ்மி சரவணகுமாரை நான் வளரும் ஓர் இயக்குனராகவே பார்க்கிறேன். அதனால் தானோ என்னவோ அவரின் இந்த நாவலை வாசிக்கும்போது ஒரு தமிழ் திரைப்படத்தை வாசிப்பது போன்றே இருந்தது.
ஒரு தமிழ்த்திரைப்படத்தை காட்டிலும்
அதிகமான காதாபாத்திரங்களில் சுவாரஸ்யங்களை கூட்டி அழகான கதையை லஷ்மி தந்திருக்கிறார்.
இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒருவரான
சம்பத் ஆரம்பத்திலிருந்தே எனக்கு பிடித்த பாத்திரமாக இருக்கிறார்.
நாவலை தொடக்கி வைக்கும் சம்பத்துதான் நாவலை முடித்தும் வைக்கிறார். இதற்கிடையில் செல்வி, தவுடு, முத்துலெட்சுமி என இவர்களைச் சுற்றி ஒரு கதையும், ஆத்தம்மா என்ற 11 வயசு சிறுமி, அவளது அப்பா-அம்மா மற்றும் ஆர்த்தியைச்
சுற்றி ஒரு கதையும் இந்த நாவல் பேசுகிறது.
விளிம்பு நிலை மனிதர்களின் அப்பட்டமான வாழ்க்கையை லஷ்மி மிக எதார்தமாக பதிவு செய்துள்ளார்.
ஓரினச் சேர்க்கை, போதைபொருள் வியாபாரம், பிக் பாக்கெட், ஆள் கடத்தல் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நகரம் தூக்காநகரமாக இயக்கிக் கொண்டிருக்க ஆதிக்கவாதிகள் என்ன செய்வார்களோ அதை அனைத்தையும் போரடிக்காமல் லஷ்மி கதை சொல்லியிருக்கும் பாணி அழகு.
"வாழ்க்கை எல்லாருக்குமிருப்பதைப் போலில்லை" என நாவலில் கூறுகிறார் லஷ்மி சரவணகுமார். வாழ்தலின் வழியையும் சில இடங்களில் கூறிக்கொண்டிருக்கிறார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக