வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வெளிப்படும் உண்மைகள்

நான் வசிக்கும் அறையில்
கதவுகளோ ஜன்னல்களோ
இல்லை

வாசலும் குசினியும் கூட
இருந்ததாக ஞாபகம் இல்லை

நான் அறியாமலே நிகழ்ந்துகொண்டிருந்தது
அவ்வறையில் எனது
பிரவேசித்தலும் வெளியேறுதலும்

ஒரு முறை
எங்கிருந்தோ வந்த புயலின் வீரியத்தை
சமாளிக்க தெரியாத
அறையின் கூரை
கழன்று பறந்தது

அப்போதுதான்
இல்லை என்று நான் நினைத்திருந்த
கதவுகளும் ஜன்னல்களும்
தன்னை வெளிக்கொணர்ந்து கொண்டிருந்தன..
மிக மெதுவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக