வியாழன், 22 அக்டோபர், 2015

வந்துவிடு


நானும் அன்றுதான்
பகவான் ஶ்ரீராமனை
முதல் முறையாக பார்த்தேன்
அவனின் நீல நிறம்
கறுத்து போய் இருந்தது
நாண் ஏற்றும் அவனது வில்
நிலம் பார்த்து
வெட்கி கிடந்தது

நான் அவனையே
பார்த்துக்கொண்டிருந்தேன்
நிலம் பார்க்கும்
சீதையாக இருந்திருந்தால்
வான் பார்க்கும் அவன்
என்னை
அடையாளம் கண்டிருப்பான்

ஆணவம் கொண்டவன் ராமன்

இன்னொரு ஆணவக்காரியை
எப்படி பார்ப்பான்!
பரிதாபத்திற்குரியன் நீ ராமா
உனது வானரப் படைகள் எங்கே?
உனது தமையன்கள் எங்கே?
நீ ஏன் உன் பொலிவிழந்து
தெருவில் நிற்க்கிறாய்?

உன் வேலைக்கு இன்னும்
கூலி கிடைக்கவில்லையா?
இப்போது என்ன செய்ய போகிறாய்?
நான் உன் தர்ம பத்தினி இல்லை
எனக்கு ஶ்ரீ ராமனும் தேவையில்லை
அரிதாரம் கலைத்து வா ராமா
உன் அவதாரங்களின் அரசியல் விளையாட்டில்
வேலைக்கான கூலிகளை இழந்துவிட்டாய்

இப்போது ஒரு கப் டீ அருந்தலாம்
வட்ட மேசைக்கு வந்துவிடு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக