வியாழன், 22 அக்டோபர், 2015

உயிர் பசி



நான் மரணம் செய்பவள் என்பதை
மாயன்  கண்டு கொண்டான்
என் வனத்தின் பச்சை வாசம்
கமல கமல 
ஒவ்வொரு மரணத்தையும்  - நான் 
ரசித்து ரசித்து  வடிவமைத்து
கொண்டிருந்தபோது
மாயன் மூடி மறைக்காத 
பெருங்காமத்தோடு
என்னை பார்த்துகொண்டிருந்ததை
நான் அறிந்திருக்கவில்லை....

எனக்கோ உயிர் பசி..
மரணப்பசி...
அமைதியான 
யட்சியின் வனத்தில்
மரணங்கள் ஜனித்து
விளையாடிக்கொண்டிருந்தன..


திரையில் மறையாத 
அவன் ஆண்குறி
வீரியமிழந்து பூமி பார்த்துகிடக்க
மாயனின் மரணத்தை
நான் நிகழ்த்திக்கொண்டிருந்தேன்….


2 கருத்துகள்: