புதன், 4 பிப்ரவரி, 2015

ரகசிய வேட்டை

இரவும் பகலும் இல்லாப் பொழுதில்
என் கன்னத்தை வருடிச் சென்றாய்
இதுவரை
பகிராத ரகசியம் அது
தேனீர் பருகச் சென்றோம்
கைகோர்த்துக்கொண்டோம்
தழுவி விடைபெற்றோம்
எல்லாம்
ரகசியமாகத்தான் நிகழ்ந்தது
என் அன்பே!
நிகழ்ந்த ரகசியங்கள் ஒரு கனவு
அந்த கனவுக்குள்
நமது பிரச்னைகள் குறித்து பேசினாய்
ஆனால்,
பிரிவைப்பற்றி பேசவில்லை
தெளிவில்லாத
என் எண்ணங்களை நீ பட்டியலிட்டபோது
அறிந்திருந்தாயா
விஷக்காளான்கள் தன் குடையை விரித்திருந்ததை
வானம் வெளுத்த அந்த இரவில்
யட்சியைப் போல தேடிவந்தேன்
நீ அறிவாய்
மௌனமாய் எனை வதைக்கவும் செய்தாய்
என் அன்பே!
அன்றுதான் என்னை முழுமையாக உணர்ந்தேன்
நான் மிக ரகசியமானவள்

1 கருத்து: