சனி, 14 பிப்ரவரி, 2015

அவனைக் காண்கிறேன்

அந்தரங்கமான
என் உலகத்தில்
பல கனவுகள்
விஸ்வரூபம்
எடுக்கின்றன...
முகம் தெரியாத
யாரோ ஒருவன்
என் படுக்கையறையில்
உறங்கிக்கொண்டிருக்கிறான்
அவன் அழகனில்லை
என் கணவனுமில்லை
அவன் உறங்கும் வேளை
தார்மீகப் பூக்கள்
பூக்கின்றன
மலிகையின் நறுமணம்
வீசுகிறது...
நான் அவனைக் காண்கிறேன்
அவனின் கனவு கலைகின்றது
நான் இன்னும்
உறக்கத்திலேயே  இருக்கிறேன்

(குவார்னிகா, 2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக