![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuxFA1JM1zUZwIJtuVlb_EpSfdZGOCUJZNp3HPAGqOcZKUudn8tTNQPfOyU1T6L95rHlo-7ZtZMwn7Sn-tcXkvn5xxe_EIDBu2Ja8WO6w0BiIgMYtWE0Vv0Tx8zNjzJ9lzoNoMKVej9Jw/s1600/a9824563637112815ed9759fe37cecaf.jpg)
நீயே வடிவமைத்த
இந்த உலகத்தில்
நான் நிலமாக இருந்தேன்
என்மேல் நீ
அத்தனை வன்முறைகளையும் செலுத்தினாய்
அடுத்தடுத்து
நீ உழுத நிலத்தில்
நானே விதையானேன்
பயிரானேன்
அறுவடையானேன்
உனக்கு
உணவானேன்
ஒவ்வொருமுறையும்
விதவிதமான வன்முறைகளை
சந்திக்க வைத்தாய்
வன்முறைகளால் -எனை
பெருநிலமாகவும் மாற்றினாய்
நான்
அப்பெருநிலத்தை
வனமாக்கி
அந்த வனத்தில் அமர்ந்துவிட்டேன்
ஒரு யட்சியாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக