செவ்வாய், 3 டிசம்பர், 2019

அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல்...



நியாயம் கேட்டு எங்குச் சென்றாலும் நீதி என்பது ஏழைகளுக்கு, கடவுள் போலத்தான் போல..
இருக்கா? இல்லையா? என்றே தெரிவதில்லை. இருப்பதுபோல காட்டிவிட்டு பின்பு புலம்ப விடுகிறது அரசு எனும் பெருங்கடவுள். 

மலேசியாவில் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்களின் வேலை ஒப்பந்த பிரச்சனை 2.12.2019 அன்று புத்ராஜெயா சுகாதார அமைச்சகத்தின் முன்பு கொண்டு செல்லப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை முறையில் மாற்றப்படும் குத்தகை  நிறுவனங்களால் வேலையில் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதாவது, ஒவ்வொரு முறையும் அரசினரால் குத்தகைக்கு எடுக்கப்படும்  புதிய நிறுவனங்கள்  பல ஆண்டுகளாக வேலை செய்துவரும் தொழிலாளர்களை புதிய தொழிலாளர்களாக, வேலைக்கு பாரம் பூர்த்தி செய்ய வைத்து, நேர்காணல் செய்து வேலைக்கு எடுப்பதாகவும், இதனால் சம்பள உயர்வு, போனாஸ், வருடாந்திர விடுமுறைகள் அனைத்தையும் தொழிலாளர்கள் இழப்பதாகவும் தெரிவித்தனர்.  


அதோடு மட்டுமின்றி தற்போது அரசு சார்பில் குத்தகைக்கு வந்திருக்கும் நிறுவனமான UEMS தொழிலார்களுக்கான ''யூனியன்'' வேண்டாம் என்று  கூறி வருவதோடு தொழிலாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட குண்டர் கும்பல் வேலையையும் செய்கிறது. இதனால், கலக்கம் அடைந்த தொழிலாளர்கள் இப்பிரச்சனையை வீதி போராட்டமாக தற்போது கொண்டு 
வந்திருக்கின்றனர்.
UEMS என்பது முழுமையான அரசாங்கத்திற்கு சொந்தமான 'கசானா 
நாஸினல் (Khazanah Nasional) நிறுவனமாகும். அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனமே தொழிற்சங்கத்தை முடக்குவது சரியா?  என மறியலில் மக்கள் கேள்வி எழுப்பினர்.

காலை 11 மணியளவில் 100-க்கும் அதிகமான அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் சுகாதார அமைச்சரான 
டத்தோ ஸ்ரீ டாக்டர்  ஜுல்கிப்ளியை சந்தித்து இப்பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க சென்றனர். 
அமைச்சரை இன்று சந்திக்க முடியாதுஅவருக்கு உடல் சுகமில்லை என அமைசர் தரப்பிலிருந்து தொடர்ந்து பதில் வந்துகொண்டிருந்தது. துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் ஒருவரிடம் மட்டுமே எங்களின்   
கோரிக்கையை நாங்கள் சமர்பிப்போம் என்று  உறுதியாக இருந்தனர். 


ஓட்டு கேட்டு எங்களிடம் வந்தவர்,  இன்று நாங்கள் தேடி வந்திருக்கிறோம் எங்களை அமைச்சர் புறக்கணிப்பாரா? என பதாதைகளை ஏந்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து சுகாதார அமைசர்  
டத்தோ ஸ்ரீடாக்டர்  ஜுல்கிப்ளி, சில மணி நேரத்தில் மக்களை சந்தித்தது மகஜரை  பெற்றுக்கொண்டதுடன், இதன் தொடர்பாக விரைவில் ஒருபேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார்.
(இப்போது எப்படி அமைச்சர் வந்தார் :) )  

இந்தப் பிரச்னை எப்போது தொடங்கியது ??
 
1990-ஆம் ஆண்டுக்கு முன்னர், பல தொழில்கள் குறிப்பாக, குப்பை எடுப்பவர்கள், மாநகர மன்றத்தில் வேலை செய்ப்பவர்கள், துப்புரவு பணியாளர்கள் என அதிகம் படிக்காதவர்கள் கூட அரசு வேலைகளில் இருந்தனர். இப்போதைய பிரதமர் துன் மகாதிர்தான் அப்போதும் பிரதமராக இருந்தார். . அரசு ஊழியர்களாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களை, குத்தகை முறையிலான வேலையாகவும் பணியாளர்களாகவும் மாற்றினார். அதன்பிறகு அப்பணி தனியார் மயமாக்கப்பட்டது. அன்றிலிருந்து பல பிரச்சனைகளை இந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். இப்போராட்த்தினை ‘’அரசாங்க மருத்துவமனை துப்புரவு பணி  தொழிலாளர்களின் தொழிற்சங்கம்’’  முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



இது தொடர்பான காணொளிகள்





   

                                                                     




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக