ஞாயிறு, 29 டிசம்பர், 2019

அலைச் சறுக்கு (கவிதை)





அலைகள் மேலடிக்க
கரையில் அமர்ந்து
கடலின் அணைப்பை
உள்வாங்குகிறேன்

சற்று தொலைவில்
சறுக்குப் பலகை மீதேறி
குட்டிக் குட்டி அலைகள்மேல்
தன்னை சமநிலைப்படுத்தி
பயணிக்குமொருவன்

பெரும் நீர்த்திரையென
எங்கிருந்தோ வந்த
தாய் அலை ஒன்று
அவனோடு தொடங்கியது
சாவின் விளையாட்டை

உறுதியான மரணம் போல்
சீற்றமும் ஓலமும் கொண்டு
அவனைப் பிடரியில்  துரத்தி
குமுறித் தூக்கிக்கரையில் வீசியது

கடலுதைத்தவனை
சாகசக்காரன் என
மெச்சுகின்றனர்

கடலலைகள் பேசாத வரையில்
கூறப்படும் ஒவ்வொரு கதையும்
அலைச் சறுக்குபவனையே
விதந்தோதிக் கொண்டிருக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக