சனி, 17 பிப்ரவரி, 2018

`பத்மாவத்` திரைப்பட தடையும், பின்னணியும்


மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியம் `பத்மாவத்` திரைப்படத்தை மலேசியாவில் திரையிடத் தடை விதித்திருப்ப து பலருக்கு தெரியாத விஷயமாக இருக்கலாம். குறிப்பாக தமிழ் அல்லாத பிற மொழிபடங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காடடதவர்கள் மத்தியில்  `பத்மாவத்` என்றொரு படம் எடுக்கப்பட்டிருப்பதும் அதனால் இந்தியாவின் வடமாவிலத்தில்  எழுந்த கலவரங்களையும் அறிய வாய்ப்பில்லை. இந்நிலையில் மலேசியாவில் அந்தப்படத்தை தடை செய்ததற்கான பின்னணியில் உள்ள  காரணங்களை ஒரு மலேசியர்களாக நாம் அறிந்துகொள்வது அவசியம் என தோணுகிறது.

`பத்மாவத்` அல்லது பத்மாவதியின் காவிய வரலாற்றை அல்லது கற்பனை பாத்திரத்தை சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம். சூஃபி கவிஞரான மாலிக் முகம்மது ஜாயஸி கி.பி. 1540-இல் பத்மாவதி  என்ற கற்பனை கதா பாத்திரத்தை உருவாக்கி 'அவதி' மொழியில் கவிதை எழுதி ஒரு கதையைக் கள த்தையே படைத்தார். மற்ற வரலாற்று காவிய நாயகிகளின் இட வரிசையில் இந்த கற்பனை கதா நாயகியும் இடம் பிடித்தாள். கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி பத்மாவதி.  ரத்தன் சிம் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி என்ற இஸ்லாமிய மன்னன்  படையெடுத்து வருகிறான்.  தன் கற்பை பாதுகாக்க தோழியருடன் தீயில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள் பத்மாவதி.

அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே தவறான  உறவு இருந்ததாக  அந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாக எழுந்த சர்சசையில்தான் ராஜா புத்திரர்கள் அமைப்பு கலவரத்தில் இறங்கினார்கள். சுமார் 69 காட்ச்சிகளை தணிக்கை செய்து டிசம்பரில் வெளியாகவிருந்த அந்தப்படத்தை ஜனவரியில் வெளியிடடார்கள். இருந்தபோதும் மலேசிய  திரையரங்குகளில் திரையிடுவதற்கு ஆயுத்தங்கள் செய்திருந்தத பொதும் மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியம் அத்திரைப்படத்தை  திரையிடத் தடை விதித்தது. மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளை பத்மாவத் திரைப்படம் தூண்டிவிடலாம் என்று  தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர்  மொஹமத் ஜாபி அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.  அரசின் இந்த நடவடிக்கை மலேசியர்களிடத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக இப்படத்தின் மலேசிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஆண்டென்னா எண்டர்டெயின்மண்ட்ஸ் தணிக்கை வாரியத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கும் இப்படத்துக்கான தடை உறுதி செய்யப்பட்டுள்ளது.  பம்பாய், வாட்டர் போன்ற திரைப்படங்களும் மதக் காரணங்களுக்காக கடுமையான நெருக்கடியை சந்தித்தன. இப்போது வரை அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகவில்லை. இஸ்லாமிய சட்டம்  மற்றும் தணிக்கை வாரியத்தின் கெடுபிடி  கடுமையாக இருப்பதே அத்தகைய  திரைப்படங்களுக்குத் தடை விதிக்கக் காரணமாக அமைகிறது.

நாட்டின் முத்திரை இயக்குனரான மறைந்த யாஸ்மின் அமாட் இம்மாதிரியான விதிக்கு இலக்காகி  அதிக நெருக்கடிக்கும்  உள்ளானவர்.  அவரது `முவால்லாவ்` என்ற மலேசியத் திரைப்படம் 2007ஆம் ஆண்டு இங்கு   விதிக்கப்பட்டது. மேலும் சில படங்களை பெரிய போரா ட்டத்துடனே அவர் வெளியீடு செய்திருக்கிறார். சில படங்களை இணையத்தில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றன. 

பத்மாவத் திரைப்படத்தை பொறுத்தவரை தற்போது இஸ்லாமியர்கள் பயப்படும் அளவுக்கோ அல்லது ராஜபுத்திர அமைப்பை சேர்ந்தவர்களுக்கோ எந்த கௌவரக்குறைவும் படத்தில் இல்லை எனவும் சொல்லப்போனால் பாஜிராவ் மஸ்தானி அளவுக்கு இந்த படம் பெரியதாக கவர வில்லை என்று ஒரு சாராரும், பிரமாண்டமான படத்தை யாரும் பார்க்க தவறவேண்டாம் என ஒரு சாராரும் விமர்சனங்கள்  பதிவிடுகின்றனர். கலவரத்தை செய்த நாட்டிலேயே அந்தப்படம் திரைக்கண்டு வரும் வேளையில் மலேசிய திரைப்பட ரசிகர்களுக்கு மலேசிய தணிக்கை வாரியத்தின் இந்த முடிவு பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.
 
குறிப்பு :
இந்த விவகாரம் தொடர்பாக தோழர் மு.நியாஸ் அகமது,  பிபிசி தமிழ் செய்திக்காக என்னிடம்  எடுக்கப்பட்ட்ட சிறிய  நேர்காணலை இந்த லிங்கில் பார்க்கலாம்.
 
 
நன்றி : தோழர் மு.நியாஸ் , பிபிசி தமிழ்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக