புதன், 21 பிப்ரவரி, 2018

வாரணாசி 1




நான் வாரணாசி போகிறேன் என சொன்னதுமே, ஏன் இப்போது காசி போகனும்? காசிக்கு இளைஞர்கள் போகக்கூடாது? அது இறுதிகாலத்திற்கான பயணமாக அமைத்துக்கொள்வதுதான் நல்லது. காசி பயணத்தை நாமாக அமைத்துக்கொள்ளக்கூடாது, அதுவாக நம்மை தேர்ந்தெடுக்கும், அதுவரை காத்திருப்பதுதான் உத்தமம். இப்படியான விமர்சனங்களை தாண்டிதான் நான் வாரணாசி செல்ல திட்டமிட்டேன். 2016-ஆம் ஆண்டே அங்கு செல்வதற்கு திட்டமிட்டும் தவிர்க்கவியலாத காரணங்களினால் செல்ல முடியாமல் போனது.



ஆனால், 2017-ஆம் ஆண்டு அந்த பயணத்தை வெற்றி...கரமாக முடித்து வருவதற்கு என் நண்பர் சாகுல் துணையிருந்தார். கிட்டதட்ட அந்தப்பயணத்தை 100 சதவிகிதம் திட்டமிட்டு முடித்துக்கொடுத்ததுமட்டுமல்லாமல் எனக்கு துணையாக அவரும் இந்த பயணத்தில் உடன் வந்தார். எங்களின் மூன்றாண்டு நட்பில் நானும் சாகுலும் இதுவரை மேற்கொண்ட 5 பயணங்களில் வாரணாசி பயணம் என்றென்றும் பேசக்கூடிய பயணமாகும்.


மிக பாதுகாப்பாக உணரக்கூடிய நட்புகள் கிடைப்பதே அரிதாகிவிட்ட காலத்தில் சாகுல், சிவா, இனியன், பாலா, முத்துகிருஷ்ணன் தோழர், சோழ நாகராஜன் சார் உள்ளிட்ட சில நண்பர்கள் எனக்கு கிடைத்தது வரம்தான்.
அதுவும் இயற்கை ஆர்வலராகவும் பயணத்தில் ஆர்வம் உள்ளவரான சாகுலோடு பயணம் போவது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. ஒத்த சிந்தனையாளர்களாக இருவரும் இருந்ததால் சில விஷயங்களை குறிப்பறிந்து நடந்துக்கொள்ளவும் முடிந்தது.


ஆன்மிகத்தில் ஆர்வம் இல்லாத நான் ஏன் வாரணாசிக்கு போக வேண்டும்? மூன்று நாட்கள் தங்கியிருந்து காசியில் நான் பெற்றது என்ன ?



(தொடரும்)
 

1 கருத்து: