வெள்ளி, 25 நவம்பர், 2016

குருதி… 1

35 வயதாகும் மாயா
வன்புணர்வு செய்யப்பட்டாள்
அதன்பின் அவளின் உடலும் வயிறும்
 மருந்துகளினால்
பரிசுத்தமாக்கப்பட்டது

மனநல மருத்துவரால்
கிளிப்பிள்ளையாய்
தனக்கேதும் நிகழவில்லை
எனச்சொல்லவும்
பயிற்றுவிக்கப்பட்டாள்
கடித்து எறியப்பட்ட மாயாவின்
ஒரு முலை
பலாத்காரம் நிகழ்ந்த
காசிப்பிள்ளை தெருவின்
தெய்வமாக அவதாரம் எடுத்துவிட்டதென
ஆறுமுகம் கூறுகையில்.....
தனக்கேதும் நேரவில்லை என
மீண்டும் மீண்டும் சொல்லியவாறே
இன்னொரு முலையை
மிகப் பொறுமையாக
அறுத்துக் கொண்டிருக்கிறாள்

நன்றி : படிகம் நவம்பர் 2016 இதழ்

2 கருத்துகள்: