வெள்ளி, 25 நவம்பர், 2016

உஷா மேத்தாவும் மரியா சின்னும்




மலேசியாவில் தற்போது சோஸ்மாச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின்-னை நினைக்கும் போதெல்லாம், எனக்கு ஏனோ இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த உஷா மேத்தாதான் நினைவுக்கு வருகிறார். 
எங்கள் நாட்டின் மரியா சின் அப்துல்லா, அரசு மீதான அதிருப்தியை வெளிபடுத்த ஞாயமான கோரிக்கைகளை நாடாறிய செய்வதற்குக் கையில் எடுத்தது 'பெர்சே' (சுத்தம்) எனும் கோட்பாட்டை. ஆனால், 11 வயதிலேயே போராட்டத்தில் குறித்த உஷா மேத்தா, பின்னாளில் வித்தியாசமான வழியில் 'சுதந்திரக்குரல்' என்ற என்ற வானொலியை நடத்திப் புரட்சி செய்தார். 

இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் என்றால் ஜான்சிராணி, துர்க்காபாய், பத்மாவதி ஆஷர் என்று பலர் நினைவுக்கு வருவார்கள். அந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாதவர் வீராங்கனை உஷா மேத்தா. 
மார்ச் 24 ஆம் தேதி, 1920 ல் குஜராத்தின் சூரத் நகரில் பிறந்தார். இவரின் தந்தையார் நீதிபதியாவார். தேசப் பக்தி எப்படி வந்திருக்கலாம் என்பதை அங்கிருந்தே புரிந்துகொள்ள முடியும். 
பின்னாளில் அவர் தீவிரமுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ள இரண்டு காரணங்கள் அஸ்திவாரமிட்டிருக்கலாம். 

1.உஷா மேத்தாவுக்கு 11 அகவை நடந்துக்கொண்டிருந்தபோது, இந்திராகாந்தி தலைமையில் உருவாக்கப்பட்ட குரங்குப் படையில் சேர்ந்து விடுதலை இயக்கத்திற்காகக் களப்பணிச் செய்தார். இந்தப் பங்களிப்பு 
2.அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு உஷா மேத்தாவுக்குக் கிடைத்தது. காந்தியம் ஈர்க்கப்பட்டு ஆசிரமப் பணிகளிலும் செய்து வந்தார். காந்தியை போலவே எப்போதும் வெள்ளைநிற கதர் சேலையை அணிய தொடங்கினார். 

குழந்தைப் பிராத்தியத்திலேயே தேச விடுதலைக்காக இணைந்துக்கொண்டவர், கல்வியிலும் முழுக் கவனம் செலுத்தினார். பல்கலைக்கழகத்தில் முதலாவது மாணவியாகத் தேர்ச்சிப் பெற்றதுடன் தந்தை வழியில் சட்டப்படிப்பையும் முடித்தார். பின் அவர் காங்கிரசில் இணைந்து இன்னும் தீவிரமுடன் செயற்படத் தொடங்கினார். 

ஆகஸ்ட் 8-ம் தேதி 1942-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள குவாலியா டேங்க் மைதானத்தில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காந்தி, 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஆரம்பித்தார். கிளர்ச்சிச் செய்ததற்காக ஆகஸ்ட் 9-ம் தேதி காந்தி கைது செய்யப்பட்டுப் புனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 

இந்தச் சூழலில்தான் காந்தியின் கோட்பாடுகளையும் அறிவிப்புகளையும் இந்தியா முழுதும் நடந்த சுதந்திர எழுச்சி தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் பாபுபாய் பட்டேல் என்பவருடன் இணைந்து ‘சுதந்திரக்குரல்’ வானொலி ஒலிபரப்பினை உஷா மேத்தா தொடங்கினார். 

காங்கிரஸ் ரேடியோ என்றும் ரகசிய ரேடியோ ஒலிபரப்பு என்றும் மக்களிடத்தில் அறியப்பட்ட ‘சுதந்திரக்குரல்’ 88 நாட்கள் மட்டுமே செயல்பட்ட 'ஹாம் ரேடியோ’ ஆகும். வெள்ளியர்களின் கெடுபிடி அதிகமாக இருந்ததால், தெரிந்தவர்கள் வீடுகளில் வைத்து மாறி மாறி வானொலி செய்திகள் மக்களுக்குப் பகிரப்பட்டது. சிட்டகாங் ஆயுதத் தகர்ப்பு, ஜாம்ஷெட்பூர் போராட்டம் உள்ளிட்ட தகவல்கள் மக்களைச் சென்றடைந்தது. இந்த வானொலிக்கு குரல் கொடுத்தவர் இராம் மனோகர் லோகியா ஆவார். 

“ “வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்தின் மூலம், நாங்கள் புரட்சியாளர்களாக மாறுகிறோம். அனைத்திந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த புரட்சி இது. ஆங்கிலேய அரசாங்கத்தை எரித்துச் சாம்பலாக்கும் வரை ஓய மாட்டோம்” இவ்வாறு எழுச்சி உரைகள் வானொலியின் வழி மக்களின் நரம்புகளில் பாய்சப்பட்டன. 

இராணுவத்தினர் ஒலிபரப்பு மையத்தை முற்றுகையிட்டு உஷா மேத்தாவை கைது செய்தனர். ரகசிய வானொலி பற்றிய தகவல்களை வெளியிட கோரி கடுமையான தண்டனைகளைக் கொடுத்தனர். மூட்டைப்பூட்சி தொல்லை, மலவாடை வீசும் அறையில் வைத்திருத்தல் எனப் பல்வேறு விதமாகக் குறுக்கு விசாரணை என்ற பெயரில் துன்பங்களைக் கொடுத்தனர். ஆனால், உஷா மேத்தாவிடமிருந்து எவ்வித தகவலையும் பெற முடியவில்லை.

 நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். வரலாற்று வீராங்கனையான உஷா மேத்தாவிற்கு 1998-ல் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு அவர் இயற்கையை எய்தினார். 



நாட்டு சுதந்திரத்திற்காகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல. அதேபோல் சுதந்திரமடைந்த ஒரு நாட்டைத் தூர்வாருதல் என்பதும் சுலபமான விஷயம் அல்ல. நான் உஷா மேத்தாவையும் மரியா சின்-னையும் இந்த இடத்தில்தான் இணைத்துப் பார்க்கிறேன். 

(நன்றி: ‘சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்’ புத்தகம், http://malaikakitham.blogspot.my/2013/02/blog-post_6.html 
இணையத்தளம்

நன்றி: http://www.oodaru.com/?p=10418#more-10418
நன்றி : றஞ்சி மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக