புதன், 16 டிசம்பர், 2015

என்ன சு..னிக்கு என்று ஏன் பாடலை எழுதவில்லை சிம்பு.... ??


இந்த வாரத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைப் பீப் மற்றும் பு..டை என்றுதான் நினைக்கிறேன். எங்குப் பார்த்தாலும் அந்தக் காவிய வார்த்தைகள் காற்றில்கூடக் கலந்து வரமாதியே இருக்கு. சட்டெனச் சொல்லக் கூசும், வசையின் போது மட்டுமே பேசப்படும் அந்த வார்த்தை இன்று எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்-பெண் என இரு பாலரும் பேசுவதற்குச் சிம்பு - அனிரூத் கூட்டணிப் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.

எனது தனிப்பட்ட கவலை, இவர்களின் கழிப்பட்ட இந்தப் பொறுக்கிச் தனத்திற்கு அவர்களின் வீட்டுப் பெண்களைச் சந்திக்கு இழுத்ததுதான். சிம்புவின் அம்மாவான உஷா, திருமணத்திற்கு முன்பான வாழ்கையைப் பற்றி ஒரு செய்தி நிறுவனம் எழுதியிருக்கிறது. பீப் பாடலுக்கு அபிநயம் பிடித்து அனுப்புமாறுச் சிம்பு-அனிருத் அம்மாக்களுக்குக் கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்னும் என்னென்ன இருக்கு என்று தேடிப்பார்க்க, பு..டையுள்ள எனக்கு மனம்- உடல் இரண்டும் கூசவே செய்கிறது.

இந்தப் பிரச்னைத் தொடர்பாகப் பல எதிர்வினைகள் எழுதப்பட்டு விட்டன. அனைத்திலும் கொற்றவை எழுதிய பதிவு அல்லது எதிர்வினை அதில் மிகவும் முக்கியமானது. ஆனால், அறத்தை முன்வைத்து, அந்தக் குடும்பத்துப் பெண்களை வசைப்பாடியிருப்பது (என் வரையில்) என்னமோ வேதனையளிக்கிறது. இந்தப் பொறம்போக்குகள் செய்யும் வசைகளுக்குகூட அந்தக் குடும்பத்துப் பெண்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இம்மாதிரியான பீப் பாடல்கள் தொடக்கத்தில் வெளியாவதற்கான வழியினைத் திறக்கும் போது, மூடுவதற்கான குரல்கள் அப்போதே காந்திரமாக ஒலிக்காமல் போனது ஏன்? ஒலித்த ஓர் இரு குரல்களும், அனிருத் போட்ட டப்பா இசையில் டான்ஸ் ஆடிவிட்டதும் மறுப்பதற்கில்லை.


வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா... ஒரு கல் ஒரு கண்ணாடிப் படத்தில் வந்த இந்தப் பாடலிருந்துதான், பெண்களை வெளிப்படையாகத் திட்டக்கூடிய பாடல்கள் அதிகம் வர ஆரம்பித்தன என நினைக்கிறேன்.

பிறகு, தனுஷ்
அடி டா அவள,
விடு டா அவள,
வெட்ரா அவள,
தேவையே இல்லை- னு

எழுதிய பாடல் சூப்பர் ஹிட். இந்த மாதிரியான கொலை வெறிப் பாடல்களைப் பொது நிகழ்சிகளிலும், ரியால்டி ஷோக்களிலும் பாடும்போதும் ஆடும்போதும் ரசித்தவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். ‘எவண்டி ஒன்னை பெத்தான், அப்பன் கையில கிடைத்தால் செத்தான்’ என்ற பாடல் வரிகளைக் கண்டித்து ஏன் அப்பாக்கள் பொங்கி எழவில்லை. பெண்களை (மகள்களையே) ரசிக்கும்படி செய்யும் சிம்புவும் வக்கரப் புத்தி அங்கு வெற்றி பெற்றுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்தப் பாடலையும் ஹிட்டாக்கிவிட்ட பெருமையில் நமது பெண்களுக்கும் நிறையப் பங்கு இருக்கிறது. இளம் வயது பெண்களுக்கு இந்தப் பாடல்களில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை போல.
உண்மையில் இப்படிப்பட்ட கழிச்சடைகளைப் பெற்றதற்கு அந்த வீட்டுப் பெண்களைவிட, ஆண்களைக் கேள்வி கேட்பதுதான் சரியாக இருக்கும். சிம்புவின் அப்பா பெண்களைத் தொடவே மாட்டார். ஆனால், அவர் படத்தில் ஒரு கலவி பாடல் இல்லாமல் இருந்ததில்லையே. அவர் செய்ய நினைப்பதை, சக நடிகர்களை வைத்துச் செய்து காண்பதில் வெற்றி பெற்றவர்தானே டி.ஆர்

ஹேய்ப் பொண்டாட்டி, எனக்குத் தேவையில்லை வைப்பாட்டி என மனநோயாளியான சிம்புவுக்கு அப்பவே டி.ஆர் சிகிச்சை எடுத்திருந்தால் ஏன் பு..டை பாடல்கள் வருகிறது? அனிருத் போன்ற நேற்று முளைத்த காளான்கள், இசை என்ற போர்வையில் ஏன் ஆபாச இசையை இசைக்கப் போகிறார்கள்?

அந்த வீட்டுப் பெண்களிடம் அனுமதிக் கேட்டு இந்தத் தருதலைகள் 150 பாடலை வடிவமைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் பொறுக்கிகள் செய்யும் பொறுக்கித் தனத்திற்குகூட அந்த வீட்டுப் பெண்களைதான் சந்தியில் நிற்க வச்சுக் கேள்வி கேட்கிறோம்.

சிம்புவின் அப்பா சென்னைப் போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகச் செய்தி அறிந்தேன். இது முழுமையாகாத டம்மிச் சொல் கொண்டு எழுத்தப்பட்ட பாடல் என்று அந்தத் தாயுமானத் தந்தை சொல்லியிருக்கிறார். முழுமையாகாதப் பாடலே இந்த லட்சணம் என்றால்,முழுமையான பாடல் என்னமாதிரியான வரியில் இருக்கும். தப்புச் செய்ததை விட அதைத் தூண்டனவனுக்குதான் தண்டனை அதிகம்னுச் சொல்லுவாங்க. இப்போது அதற்கு ஆதரவாகத் திருவாய் மலர்ந்த டி.ஆரை என்ன செய்யலாம்.
நியாயப்படி அந்தப் பாடலுக்கான முத்திரைகளை இந்தப் பண்ணாடைகளை பெற்ற தகப்பன் சாமிகள்தான் பிடிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பீப் பாடலில் ‘உன்னை டார் டாராக் கிழிச்சு ஓத்துட்டுப் போனவள’ என்ற வரியும் இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம்தான் சிம்புவிடம் கேட்கத் தோணுது. என்ன பு..டைக்கு லவ் பண்ற என்பதற்குப் பதில் என்ன சு..னிக்கு லவ் பண்றோம்? என்று எழுதியிருந்தால் அந்தப் பாடல் எப்படி வந்திருக்கும்? அதற்கான எதிர்வினைகள் எப்படி எழுதப்பட்டிருக்கும்? சொல்லப்போனால், மார்கழி மாதத்திற்குப் பொறுத்தமான வரியும் அதுதானே சிம்பு..

1 கருத்து:

  1. வக்கிரப்புத்திக்காரர்களின் செயலிற்கு,அவர்கள் வீட்டுப் பெண்களை சந்திக்கு இழுக்கச் செயது,யாவும் அறியாதது போல இருக்கிறது இந்திய அரசின் தணிக்கைத்துறை. இப்படியான படங்கள் பாடல்கள் வசவுகள் வழி சமுகத்தின் , மோதல்களினூடான பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளவே,அரசுகளின் கலைச்செயற்பாடு இருக்கிறது.இதை எதிர்த்து சமரசமற்ற போராட்டம் அவசியமே.அந்தப் போராட்டம் மேல்கட்டுமானத்தை மட்டுமன்று அடிக்கட்டுமானத்தை பெயர்த்தெறியும் வீரார்ந்த போராட்டமாக அமைய உங்கள் எதிவினைகளும் எழுத்தும் பயன்படும் என்று கருதுகிறேன்.அப்படியான் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தருதலைக்ள் மீதாஅன் வழக்கு வந்ததே தமிழக் அரசின் ஆணையால் அன்று. ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டமும்,புகாரும்தன் காரணம்.வாழ்த்துகள் யோகி

    பதிலளிநீக்கு