திங்கள், 9 மார்ச், 2015

என் கரு(வி)த்தரிப்பு

என் கருவறை
அறுவதும் பின் இயங்குவதுமாகவே
இருக்கிறது

எந்த நேரம் என்று
பாராமல்
கருவறை அறுவதால்
யாரிடமும் இயல்பாகவும்
நிம்மதியாகவும் பேச முடிவதில்லை

என் கருவரையில் நுழையவிரும்பாத விந்தைப் பற்றி
கேள்வி கேட்கப்படுகிறது

விந்துகள் கருவறையில்
மரமாவதைப் பற்றியும்
ஆணிவேர்கள் ஆழ இறங்கியதைப்பற்றியும்
திரும்பத் திரும்பக் கூறி வருகிறேன்

பதில்கூறும் ஒவ்வொரு கணமும்
கருவறை அறுவதையும் அதில் நீளும்
கவிச்சி நாற்றத்தையும்
என் மனம் ஒவ்வாதபடியே உள்ளது


என் கருவறை அறுவதும்
கேள்விகள் எழுவதும்
எக்காலத்திலும் நிறுத்த முடியவில்லை


உதிரக்குழாயை அடைத்த என் பதில்கள்
9 மாதக் கருவென வளர்ந்து
காத்திருக்கிறது பிரசவத்திற்காக



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக