வெள்ளி, 10 ஜனவரி, 2020

ஈரான் மீது போர் வேண்டாம் !




 மூன்றாம் உலகப் போர் மூலுமோ என்ற அச்சம் பல நாடுகளை  தொற்றிக்கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவின் மீது கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.  அந்த வகையில் மலேசிய அமெரிக்க  தூதுரகத்தின் முன்பு நேற்று கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. பிஎஸ்எம் தலைமை ஏற்று நடத்திய இந்த கண்டன கூட்டத்தில் 47 அரசு சாரா இயக்கங்கள் ஆதரவளித்து கலந்துகொண்டதுடன் தங்களின் எதிர்வினையையும் தெரிவித்தன. இக்கண்டனம் தொடர்பாக ஒரு மகஜரும் அமெரிக்க  தூதுரகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் தீவிரம்  மிகக் கடுமையாகவும்  மற்றும் ஆபத்தானதாகவும் இருப்பதை யாரும் உணராமல் இல்லை.





டொனால்ட் ட்ரம்பின் நிகழ்த்தியிருக்கும் படுகொலையாக பார்க்கப்படும் ஈரானிய தளபதி காசெம் சுலேமானீ மரணம், போரை தூண்டிவிடும்  ஒரு  பொறுப்பற்ற செயல். மேலும் அதிகரித்திருக்கும் பதட்ட நிலையானது மூன்றாம் உலகப்போரை தூண்டி விடுமோ என்ற அச்சம் கூடியதாக இருக்கிறது. 

1979ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் உட்பூசல் தொடர்ந்தாலும் 2018-குப் பிறகு அதாவது அணுஆயுத திட்டத்தை குறைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்திற்கு இரான் வழங்கிய  ஒப்புதலை  கலைத்து புதிய
ஒப்பந்தத்திற்கு டிரம்ப் நெருக்குதல் கொடுத்ததால் இரு நாடுகளுக்கும் பகைமை உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது.


கடந்த இரண்டு சகாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான போர் மில்லியன் கணக்கான மக்களுக்கு தீவிர பயங்கரவாதம், பேரழிவு, துயரம் மற்றும் துன்பங்களை கொண்டு வந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஈரானுக்கு எதிரான போரும் ஈராக்கில் மற்றொரு இராணுவ மோதலும் நிலைமையை மேலும் மோசமடையவைக்கும்.

பி எஸ் எம் கண்டனத்தில் முழங்கியது 

- அமெரிக்காவிலிருந்து வரும் போர்க்குணமிக்க செயல்களுக்கும் போர்க்குணமிக்க சொல்லாட்சிக்கும் ஒரு முடிவு;
- ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை உடனடியாக திரும்பப் பெறுதல்;
- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்றொரு போரைத் தவிர்க்க ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் கட்டுப்பாடு;
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு முடிவு;
- அனைத்து  வெளிநாட்டு அமெரிக்க இராணுவ தளங்களையும் மூடு.

கடந்த மூன்றாம் தேதி இரானின் இராண்டாவது அதிகாரமிக்க நபராக கருதப்பட்ட இராணுவ தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்க படையால் கொல்லப்பட்ட்து அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடை இறுதி சடங்கில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் ஒன்றே போதும் அந்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று.

அமெரிக்காவிற்கு எதிராக குரல் எழுப்பும் எந்த நாட்டையும் எந்த நபரையும் அமெரிக்கா விட்டு வைக்காது என்பது நாம் அறிந்ததுதான். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை டிரம்ப் உணரும் காலம் நெருங்கிவிட்ட்து என்று தோன்றினாலும் அதற்காக கொடுக்கப்போகும் அல்லது போகப்போகும் உயிர் விலையை நினைக்கும்போது பயமாக இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக