வியாழன், 10 செப்டம்பர், 2015

இருளும்-யட்சியும்

 நிறங்களற்ற
யட்சி
யுகயுகமாக
இருளை வளர்த்து வந்தாள்

அவள் வளர்க்கும் இருளோடு
இரவும் சேர்ந்தே வளர்ந்தது

யட்சியின் இருள்
நீல நிறம் கொண்டது

பகலை
ஊற்றி ஊற்றி
நிரப்பியதில்-அது
கருநீலத்தில்
உருமாறி
வனத்தில்
வெடித்து சிதறியிருந்தது

நிறங்களறியா யட்சி
தான் வளர்க்கும்
இருளை
யட்சனின்
நகக்கண்களில்
சேமித்தாள்

அவள் கண்களை
தாழ்த்தும் போதெல்லாம்
இருள் செந்நிறத்தில் மாறி
விளையாட்டு காட்டுகிறது

யட்சிக்கு நிறங்கள்
மட்டுமே
தெரிந்திருக்கவில்லை…


1 கருத்து: