
அவனின் குரல்
மெல்லியதாகக் கேட்டது
அவன் என்னிடம்தான் பேசினான்
யாருக்கும் புலப்படாத அவனை
என் கண்கள் கண்டுவிட்டதாகச் சொன்னான்
பனி பொழிவதாகவும்
உஷ்ணத்தில் வெந்து தணிவதாகவும்
முயல் இறைச்சியில் இனிப்பு கூடியுள்ளதாகவும்
பெருமாள் சிலையில்
வதனங்கள் மின்னுவதாகவும்
வனம் முழுக்க
ஊதா மலர்கள் மலர்ந்துள்ளதாகவும்
சாம்பல் பறவையாக
அவனே திரிவதாகவும்
கூறிக்கொண்டிருந்தான்
சாம்பல் பறவை உதிர்த்த
இறகு ஒன்று
இன்று
சொல்லிவிட்டுச் சென்றது
அவனின்
கடந்த கால துன்பியலை
-ஏப்ரல் 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக