ஞாயிறு, 18 ஜனவரி, 2015

மலேசிய இலக்கியம் திணை மரபை இழந்து விட்டதா?

 யவானிகா ஸ்ரீராம் இவர் ஒரு பின்நவீனத்துவ கவிஞராக அறியப்படுகிறார். தனது கவிதைகளிலாலும் படைப்புகளாலும் தனக்கென தனிப் பாணியை வைத்திருக்கும் இவர் அண்மையில் ‘வல்லினம்' இலக்கியக் குழுவில் கவிதை குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.


தொடக்கத்தில் நான் மலேசியாவில் இலக்கியம் குறித்தப் பார்வை இல்லை என்றே எண்ணியிருந்தேன். காரணம் நான் மலேசியாவிற்கு வருவது புதிதல்ல. 10 தடவைக்கு மேல் இங்கு வந்திருக்கிறேன். ஒரு முறை மலேசிய இலக்கிய ஆர்வளர்களை அடையாளம் காணும் நோக்கில் இரு ஜப்பான் மொழிபெயர்ப்பு புத்தகங்களை ஒரு புத்தகக்கடையில் கொடுத்து இந்தப் புத்தகங்களை யாரேனும் வாங்கினால் அவர்களின் தொலைபேசி எண்ணை மட்டும் குறித்து வைத்து கொடுங்கள் என்றேன். அவர்கள் அதில் பெரிய ஆர்வத்தை காட்டாததோடு, இங்கிருப்பவர்கள் ‘கல்லோ காவியமோ', கரித்துண்டு, அகிலன் புத்தகங்கள் இப்படித்தான் வாசிப்பார்கள். வேண்டும் என்றால் வைத்து விட்டுப் போங்கள் என்று சொல்லிவிட்டார்கள். நானும் வைத்து விட்டு வந்து விட்டேன். இன்று அந்தக் கடையும் இங்கு இல்லை. ஆனால் 2004-ஆம் ஆண்டுவாக்கில்தான் இங்கு இலக்கிய பரிச்சயம் இருக்கிறது என்று என்னால் உணர முடிந்தது. அந்தக் காலக்கட்டத்தில் கவிதைகள் தரத்தைக் குறித்து நாளிதல்களில் வாசிக்க நேறுகையில் , அதிகலவில் காதல் கவிதைகளும், தகவல்களை ஒருவரை ஒருவர் பகிர்ந்துக்கொள்வதைப் போன்றும் இருந்தன. தீவிர கவிதைக் குறித்த பார்வையை ஆராய நேறுகையில் மலேசியாவில் அதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு வேண்டுமே என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டாலும், இன்னும் மலேசிய கவிதைகளில் தினை மரபு குறைவாகவே இருக்கிறது. அதாவது தமிழர்களுக்கு 5 தினைகள் உள்ளன. இங்கு போய் வசித்தாலும் அந்த நிலமும் அவனும் மிக நெருக்கமான உறவுடைய விஷயமாகத்தான் அமையும். ஆனால் இன்னும் இங்கு வசிப்பவர்கள் இந்த மண்ணோடு உண்டான உறவுகள் அவ்வளவு வழிமையாக இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. இங்கு படைக்கப்பட்ட கவிதைகளை வாசித்தப் பிறகு ஏற்பட்ட சந்தேகமாக அதை நான் முன் வைக்கிறேன். அதாவது நமக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று 5 திணைகள் உள்ளன. மேலும் யாப்பிலக்கிய மரபிலும் இந்த திணைகள் குறித்து
மணிமொழி, விஜயா, குழலி, யோகியுடன் 
நிறைய கவிதைகள் நமக்கு போதிக்கின்றன. இந்த நிலத்தோடு உறவு என்பது இங்கிருக்கும் பறவைகள், மரங்கள் சூழல்கள் , மனிதர்கள் என்று விரிகிறது. தமிழன் தனது கவிதையை எப்படி வகுத்துக்கொண்டான் என்றால் திணை மரபுகளை, திணை மரபுகளில் இருக்கக்கூடிய விழிப்பொருள் கருப்பொருள் வழியாகத்தான் எல்லா விஷயங்களையும் சொல்லக்கூடிய வடிவமாக வைத்திருந்தான். அதைத்தான் செவ்வியலாகவும் ஆக்கப்பட்டது. அதன் வழியாகத்தான் காதல், ஒழுக்கம், பண்பு ஆகியவையும் பாதுகாக்கப்பட்டது. அதன் வழியாகத்தான் அரசியலும் எழுதப்பட்டது. இந்த முறை மலேசிய கவிதைக்குள் வர வேண்டும். அனுபவங்களை கவிதையாக்கினால் முழுமையாக இருக்காது. அதின் திணையையும் புனைவையையும் சேர்க்கும் போது மிகச்சிறந்த கவிதைகள் வெளிப்படும். தற்போது சில முக்கியப்படைப்புகளை மலேசிய எழுத்திலிருந்து காணக்கிடைக்கிறது. இது உண்மையில் ஆரோக்கிய மாற்றம்தான்” என்று மலேசிய இலக்கியம் குறித்த பார்வையை அவர் பகிர்ந்துக்கொண்டார்.

(நம் நாடு ,செப்டம்பர் 2013)


 கவிதை 

குரங்கிலிருந்து பிறந்தவர்கள்
இறந்து கொண்டிருக்கிறார்கள்
கருப்புநிற அமரர் ஊர்திகள்
கண்ணாடிச் சவப்பெட்டிகள்
மௌனமாகத் தலைகவிழ்ந்து
நல்லடக்கத்திலிருந்து வெளியேறி
காமத்துடன் திரும்பும் ஆத்மாக்கள்
இறைச்சியுடன் வெந்த உருளைக்கிழங்கை
புசிக்கின்றார்கள்
அவர்கள் மீதமுள்ள நிலங்களை
ஏறிட்டுப் பார்க்கிறார்கள்
கரும்புத் தண்டுகள் சூல்கொண்டு விட்டதா?
பெண்கள் பூப்படைகின்றார்களா?
சம்பவங்கள் அனைத்தும் குறிப்பெடுக்கப்படுகிறதா?
நேற்றைய பகலின்
நாளைய இரவிற்குள்
அனைத்தையும் தெரிந்து கொண்டவர்களாக
தனியாக
பிறகு யாருடனாவது
இடங்களின் மேல் அவதானமற்று
பேசத்தொடங்கி விடுவது
ஒரு பழத்தை இரவுநேர
வயிற்றுக்குள் தள்ளுவதாய் இருக்கிறது
ஏலமிடும் சந்தைக்கருகே
பொது இடங்களில்
தழுவிக் கொள்வது
நாய்களுடன் நடை பயில்வது
பல வகையில் குறைந்து வரும்
உணவுப் பழக்கம்தான்
புணர்ச்சியில் எப்போதும் தலைகவிழும்
குரங்குகளை சவ அடக்கத்தில் காண முடியவில்லை.
o யவானிகா ஸ்ரீராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக