வியாழன், 21 மே, 2020

வீரமரணத்தை தழுவும் யோரூம் குழுவினர்




"யோரூம் குரூப்’’ (GroupYorum ) வுடைய மேலும் ஓர் இசைக்கலைஞர் உண்ணாநிலைப் போராட்டத்தில் வீர மரணமடைந்திருக்கிறார். முஸ்தாபா கோசெக், அவருடைய சகாக்களுடன் ஜூன் 2019-ல் தொடங்கிய உண்ணாநிலை போராட்டம், துருக்கியின் ரெசெப் தயிப் ஏர்டோகன் அரசாங்கத்தின் மனக் கதவுகளை திறக்கவே இல்லை.

தவிர சுதந்திரமாகப் பாட வேண்டும் என்ற கோரிகையை முன்வைத்து தொடங்கிய இந்த இடதுசாரி குழுவின் போராட்டத்தை, தீவிரவாதிகள் என்றும் தேச துரோகிகள் என்றும் துருக்கிய அரசு குற்றம் சாட்டியது. மேலும், ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதியப்பட்டது. இன்னும் அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் மாறவும் இல்லை. 

யோரூம் குரூப் எனும் குழுவுடைய தொடக்கம்
 


 1985-ம் ஆண்டு நிறுவப்பட்ட இக்குழு, துருக்கிய மற்றும் குர்திஸ்தான் நாட்டுப்புற இசையை, இடதுசாரி அரசியல் கண்ணோட்டத்துடனும் , முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முற்போக்கான பாடல்களை உருவாக்கியும் வந்தது. யோரும் என்றால் துருக்கி மொழியில் கருத்து என்று பொருள்.
அவர்களின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கியதுடன், ஏழைகளை ஒடுக்கும் துருக்கிய அரசாங்கத்தின் கொள்கையை விமர்சிப்பதற்கும் வகையில் அவர்களின் பாடல்கள் இருந்ததால், அரசாங்கத்திற்கு இது தலைவலியைக் கொடுத்தது. அதன் உச்சக்கட்டம் அந்தக் குழுவை சேர்ந்த ஐவரை கடந்தாண்டு சிறைபிடித்தார்கள்.

இந்த குழு 1985 இல் நிறுவப்பட்டதிலிருந்து பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர். அதோடு 23 ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர். சிறையில் இருந்தபோது அவர்கள் நிரபராதிகள் என்றும் அரசாங்கத்தை விமர்சிக்க உரிமை உண்டு என்றும் காட்ட உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.


தோழர் ஹெலின் பெலெக் மற்றும் முஸ்தாபா கோசெக்

 கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி, இந்தக் குழுவைச் சேர்ந்த தோழர் ஹெலின் பெலெக், இந்தப் அறப் போராட்டத்தில் பலியானார். 297 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் தோழர் முஸ்தாபா கோசெக், 25/4/2020 நேற்று சிறையிலேயே பலியானார். தோழர் இப்ராஹிம் கோசெக் இன்னும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொன்டிருக்கிறார்.

 
வலது சாரிகளை எதிர்த்தால், போராட்டவாதிகளுக்கு கிடைப்பது மரணம்தான் பரிசுபோல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக