வெள்ளி, 28 டிசம்பர், 2018

'அம்பரய'


சிங்கள நாவல்: அம்பரய
ஆசிரியர்: உசுல.பி.விஜய சூரிய
தமிழில்: தேவா (devkathi@yahoo.com )
வெளியீடு: வடலி

'அம்பரய' அப்படியென்றால் என்னவாக இருக்கும்? யாருடையதாவது பெயரா? போராளியின் பெயராக இருக்குமா? சிங்களத்தின் மொழியாக இது இருக்குமா?  உசுல. பி. விஜய சூரிய என்ற பெயர் சிங்களப்பெயர் எனில் 'அம்பரய' என்பது சிங்கள வார்த்தையாகத்தான் இருக்கும். என்ன அது? இப்படியான சந்தேகங்களோடு இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியும் என எனக்குத் தோணவில்லை.
என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தோடு வாசிக்க ஆரம்பித்த இந்தச் சிறிய நாவலில் அதற்கான பதில் சில பங்கங்களிலேயே கிடைத்தது.

'அம்பரய'  என்றால் திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து வெளியேறும் ஒருவகை கழிவு. அதை நறுமணத்தைலங்கள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும். அதிக விலைபோகக்கூடிய இரசாயன திரவம் அது. ஆனால், அந்த 'அம்பரய' கிடைக்கிறது சுலபமல்ல. அதற்காகக் காத்துக்கிடக்கும் மீனவர்கள் அதிகம். மேலும், கடலாம்பாலும் லேசில் கிடைக்கும் ஒரு பொருளும் இல்லை.
ஒருமுறை அவனுக்கும் அந்தத் திரவம் கிடைத்தும் அதன் துர்நாற்றம் கிடைத்தது ஆம்பல் என அவனால் அடையாளம் காண முடியவில்லை. அதை மார்டீனிடம் கொடுத்து விடுகின்றான்.   மார்டீன் அதை அவனுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான். 

சுமனே எனும் மீனவனைச் சுற்றி கடலோர மீனவ கிராமத்தில் நடக்கிறது கதை. நாவல் முழுதும் தன் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறான் சுமனே. கொலையாளியான தந்தை, தங்கைகள் , ஆதரவற்ற சிற்றப்பா , கொலைகாரனின் மகன் என்று விமர்சிக்கும் ஊரார் இவர்களுக்கு மத்தியில் முன்னேறத் துடிக்கும் இளைஞனாகத் துடிக்கிறான் சுமனே. நேர்வழி ஏதும் கிடைக்காமல் , குறுக்கு வழியிலும் முயல்கிறான். சிறிசேனாவை சந்தித்து கசிப்பு விற்கச் செல்கிறான். அதனால் சிறைக்கும் போகிறான். கசிப்பு என்பது கள்ள சாராயமாகும்.
சிறையில்  பிரதமரின் வீடமைப்புத் திட்டத்தை அறிந்து அதைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறான். அதற்காகப் பிரதமருக்கு அவனே ஒரு கடிதத்தையும் எழுதுகிறான்.

பின் காணிக்காக போராடுகிறான். பயன்படுத்தமுடியாத ஒரு  காணி கிடைக்கிறது. கிடைத்த காணியோடு போராடி ஒரு வீட்டை கட்டி முடிக்கிறான். 
இதுவரை அறிந்துகொள்ளாத, அறிய விரும்பாத, சிங்களம் என்றாலே துஷ்டரைப்போல தூர நிற்கிற, ஒரு சமுதாயத்தைப்  பற்றிய  அதிலும் வறிய நிலையில்  கடல்சார்ந்து வாழ்கிற ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையை இந்த நாவல் மிக அழகாகவும் எதார்த்தமாகவும்  அறிமுகப்படுத்திவைக்கிறது.

கிட்டதட்ட இந்திய வாழ்க்கை முறையோடு ஒன்றிவிட்ட சில சடங்குகளை சிங்களவரும் பின்பற்றிக்கொண்டிருப்பது தெரியவருகிறது. மேலும், உறவு முறைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. இதை எளிமையாக நமக்கு உணர்த்துகிறது அம்பரய. மொழிபெயர்ப்பு பொறுத்தவரை மொழிபெயர்ப்புதானா என  எண்ண வைக்கிறது. மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக