செவ்வாய், 14 ஏப்ரல், 2015

பொய் எனத் தெரிந்தும்


அவன் அங்குதான் இருந்தான்
அவனின் குரல்
மெல்லியதாகக் கேட்டது
அவன் என்னிடம்தான் பேசினான்
யாருக்கும் புலப்படாத அவனை
என் கண்கள் கண்டுவிட்டதாகச் சொன்னான்
பனி பொழிவதாகவும்
உஷ்ணத்தில் வெந்து தணிவதாகவும்
முயல் இறைச்சியில் இனிப்பு கூடியுள்ளதாகவும்
பெருமாள் சிலையில்
வதனங்கள் மின்னுவதாகவும்
வனம் முழுக்க
ஊதா மலர்கள் மலர்ந்துள்ளதாகவும்
சாம்பல் பறவை
அவன் கூடடைந்ததையும்
கூறிக்கொண்டிருந்தான்
அவன் சொல்வது
அனைத்தும்
பொய் எனத் தெரிந்தும்
நான்
கேட்டுக்கொண்டிருந்தேன்
அவனது புனைவுகளில்
புத்தனின் மௌனம்
கரைந்திருந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக