வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கலைக்கூடம் – புகைப்படம் – யோகி


2015 -ஆம் ஆண்டிலிருந்து நான் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். தொடக்கத்தில் ஊடாக தொழிலுக்காகக் சவால் நிறைந்த சில புகைப்படங்களை எடுத்த அனுபவம் இருந்தாலும் அதை சேகரிக்க தவறிவிட்டேன் என்பது காலம் கடந்த உணர்ந்த உண்மை. கிட்டதட்ட 10, 000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைரஸ் காரணமாக அழிந்தும் போனது. அதில் 2000 -க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கால்களை மட்டும் பிடித்தது.

கவனம் தேவை என்பது புகைப்படங்களை மீட்க முடியாது என்ற உண்மை தெரிந்த போதுதான் உணர்ந்தேன். ஊடகத்தை விட்டு வெளிவந்த பிறகு இன்னும் தீவிரமாக புகைப்படங்களை எடுத்தேன். அவை எனக்கு பயிற்சியாக அமைந்தன. சுயமுயற்சிகளை நானே செய்துகொண்டேன். அதன் பிறகு எடுத்த பல புகைப்படங்கள் மனதுக்கு நெருக்கமானவையாக அமைந்தன. புகைப்பட கலைஞர்களாக இருக்கும் நண்பர்களுடன் பேசுவதும் பயிற்சிதான் எனக்கு.

நான் எடுத்த புகைப்படங்களை நடு இணைய இலக்கிய குழுமம் இதழ் 6-ல் பதிந்திருக்கிறார்கள்.
நடு குழுமத்திற்கு என் நன்றியும் அன்பும். குறிப்பாக தோழர் கோமகனுக்கு என் நன்றி.

புகைப்படங்களை காண விரும்புபவர்கள்  http://blog.naduweb.net/?p=3858 இந்த  இணைப்பு சொடுக்கி பார்க்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக