ஊடறு பெண்கள்
சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வு மிக முக்கியமானதாக எனக்கு அமைந்தது. பார்வையாளர்களாக மற்றும் பங்கேற்பாளராக வந்திருந்த அனைவருக்குமே அது முக்கியமான அமர்வுதான். காரணம் பேசவிருந்த தலைப்பும் அதைப் பேசுவதற்கு முன்வந்திருந்த தோழிகளும் அதற்கான தயார் நிலைகளும் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் குறிப்பிட்ட நேரத்தை தவறிதான் சந்திப்புத் தொடங்கப்பட்டது.
முதல்
அமர்வாக 'உரிமைகளுக்கெல்லாம் சொந்தக்காரி' என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வந்திருந்த விஜியும், 'இலங்கை வாழ்வியலில் கூத்துக்களை' என்ற தலைப்பில் கூத்துக்கலையில் ஆர்வமுள்ள யாழினி யோகேஸ்வரனும் உரையாடலை தொடங்கினர். மட்டக்களப்பு,
சூரிய பெண்கள் அபிவிருத்தி அமைப்புப் பில் செயற்பாட்டாளராக இருக்கும் விஜி தனக்கு வழங்கப்படட தலைப்புக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை அவரின் உரையில் வெளிப்படுத்தினார். மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் மூலமாகப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல இன்னல்களைப் பார்த்தவர்
விஜி . உரிமை என்றால் என்னவென்றே சில பெண்கள் அறியாத வேளையில் இதுகுறித்துப் பேசுவது காலத்தின் கட்டாயமாக அமைந்திருக்கிறது.
 |
விஜி |
கூத்துக்களைத் தொடர்பாகத் தன் சுய அனுபவ பூர்வமான மற்றும் ஆய்வுப்பூர்வமான தகவல்களை யாழினி வெளிப்படுத்தினார். குறிப்பாக இலங்கை போர் காலக்கடத்தின்போது, மீட்பு மையங்களில் இருக்கும் கலைஞர்கள் எவ்வாறு தங்களின் கலைதாகத்தை தீர்ந்துகொண்டார்கள் என்பதை யாழினி தெளிவுபடுத்தியபோது பெரும் மௌனமே நிலவியது. எல்லாம் இழந்துவிட்ட நிலையில் கலைக்காக ஆபத்தான விஷயங்களை முன்னெடுக்கக் கலைஞர்கள் செய்யத் தயங்கவில்லை. தனது உரையின் இறுதியில் யாழி கூத்துக்கலையின் பாடல் ஒன்றை பாடி முடித்தது மிகவும் நிறைவான முடிவாகப் பலரையும் கவர்ந்திருந்தது.
 |
யாழினி |
இரண்டாவது
அமர்வில் 'சதையை முதலீடும் உலகச் சந்தை' என்ற தலைப்பில் டெல்லியிலிருந்து வந்திருந்த மாலதி மைத்திரியும் , 'சமூகப் படிநிலையில் பெண்ணியக் கோட்ப்பாடுகள்' என்ற தலைப்பில் சென்னையிலிருந்து வந்திருந்த கல்பனாவும் பேசினார்கள். பெண்ணிய ஆளுமைகள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்படும் இந்த இரு ஆளுமைகளின் உரைகள் மிகவும் கவனத்தைக் குவிக்கும் வகையில் அமைந்தது.
 |
கல்பனா |
 |
மாலதி மைத்திரி |
 |
ஆழியாளும் ரஜனியும் |
தொடர்ந்து
மத்திய உணவுக்குப் பின் மூன்றாவது அமர்வு ஆரம்பமானது.
தனியுரிமைச்
சட்டங்களும் பெண்களும் (இந்தியாவை முன்வைத்து) மதுரையின் பிரபல வழக்கறிஞ்சர் ரஜனி பேசினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட ரஜனி சமூகத்தின் மீது தனக்கிருக்கும் கோபத்தையும் அதே நகைச்சுவையோடு வெளிப்படுத்திப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். வழக்கறிஞர்களுக்கேகூடத் தேவைப்படும் அடிப்படை தேவைகளைப் பெற போராட வேண்டியுள்ளதை ரஜனி சிரித்துக்கொண்டே கூறினாலும் அதில் பொதிந்திருக்கும் தனியுரிமை தொடர்பான அவலம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
வீடும் பாராளுமன்றமும் - மைய நீரோட்டத்தில் சுழிகளும் எதிர் நீச்சலும் (அவுஸ்திரேலியாவை முன்வைத்து) இலங்கையிலிருந்து ஆஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆழியாள் பேசினார். முன்னதாக இந்தத் தலைப்பை நான் வாசிக்கும்போது புரிந்துகொள்ளவே
எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. என்னதான் பேச போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்குச் சில புதிய விஷயங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இருந்தது. எந்த நாட்டிலும் பெண்களுக்கான சுய கௌரவத்தைப் போராடித்தான் பெற வேண்டும் என்பதும் அதைத் தக்க வைத்துக்கொள்ளத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதும் நிதர்சன உண்மையாகிவிட்டதை பெண்கள் தொடர்ந்து கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவரின் அமர்வு பேசியது.
 |
சுரேகாவும் எஸ்தரும் |
நான்காவது
அமர்வில் இரண்டு இலங்கை தோழிகள் தங்கள் அனுபவங்கள் ஊடாகக் கட்டுரையைச் சமர்ப்பித்தனர். ஊடறு பெண்கள் சந்திப்புக்கு முதன்முதலாக வந்திருந்த சுரேகா பரம் குழந்தை தொழிலாளர்கள் குறித்துப் பேசினார். இளம்பெண்ணான சுரேகா அந்த இளமைக்கே உண்டான துள்ளல் அவர் மொழியில் தெரிந்தது.
தொடர்ந்து இலங்கை சமூகத்தில் மூட நம்பிக்கைகள் ஊடான வாழ்வியல் சூழல் என்ற தலைப்பில் எஸ்தர் பேசினார். மிகவும் சுவாரஷ்யமான தனது பேச்சின் வாயிலாகக் கனமாகிபோயிருந்த பல அமர்வுகளில் சோர்வை
தூசி தட்டி எறிந்துவிட்டு நிமிந்து உட்கார வைத்தார். தன் இட்சைக்கு இணங்கவில்லை என்றால் பூனையாக மாற்றிவிடுவேன் எனப் போலி பூஜாரிக்கு இரையான ஒரு அப்பாவி பெண்ணின் கதை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் காலத்திலும் மூடநம்பிக்கைகளை நம்பி தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் பெண்களையும் அவர்களைப் பகடைக்காயாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கும் இந்தச் சமுதாயத்தையும் கேள்விகேட்கும் வகையில் அமைந்தது எஸ்தரின் உரை.
 |
றஞ்சி, ஆனந்தி, யோகி |
தொடர்ந்து
ஐந்தாவது அமர்வாகப் புலம் பெயர் வாழ்வியலில் இரண்டாம் தலைமுறையினர் எதிர்நோக்கும் பிரச்னைகளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் ஐரோப்பிய வாழ்க்கையை முன்வைத்து ஊடறுவின் ரஞ்சியும் ஆனந்தியும் உரையாற்றினர். மலேசிய வாழ்க்கையை முன்வைத்து நான் (யோகி) பேசினேன்.
 |
மும்பை தோழிகள் |
அடுத்த
அமர்வு (ஆறாவது) வந்திருந்த ஊடறு பெண்கள் அனைவரும் காத்திருந்த அமர்வாகும். அதுவரை எங்களின் உரைகளையும் கேள்வி பதில்களையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் பங்கெடுத்துக்கொண்டும் இருந்த மும்பை தோழிகள் இந்த அமர்வில் அவர்களின் குரல்களை எங்களுக்கு வெளிப்படுத்தினர். இந்தியாவின் முக்கியப் பெருநகரத்தில் வாழும் பெண்களுக்கு என்ன கஷ்டம் இருந்திட போகுது எனப் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம்.
எத்தனை முட்டாள் தனமான எண்ணம் என உடைத்தெறிந்தது அவர்களின்
உரை. நடுத்தர வர்கத்தினர் மலம் கழிக்கக்கூடச் சுகாதாரமான இடம் இல்லை என்று தோழி அனிதா டேவிட் தனது அனுபவித்திலிருந்து பேசும்போதும், இந்த மும்பை நகரத்தில் பல ஆண்டுகளாக வாழ்கிறேன்; இது என்னைப் பிரமிக்க வைத்ததே இல்லை என்று அவர் கூறும்போதும் ஜிகுனா தூவப்பட்டு மேலே மினுமினுப்பாகவும் உள்ளே அவலங்களை நிறைசெய்யாமல் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது எவ்வித மரியாதையும் வரவில்லை.
இந்த
அமர்வில் தோழி ஈஸ்வரி தங்க பாண்டியன், தோழி அனிதா டேவிட், மகிழ்ச்சி இயக்கத்திலிருந்து வந்திருந்த மற்றுமொரு தோழி தங்களின் காந்திரமான உரையை நிகழ்தி அமர்ந்தனர். மிகவும் கனமான மேலும் இருண்மையான சுழலுக்குள் மும்பை சிக்கிக்கொண்ட மாதிரியான உணர்வு எங்கள் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. சூடான தேநீர் எங்களை ஆசுவாசப்படுத்த கொஞ்சம் உதவியது. இறுதி அமர்வாக 2017 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களின் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வோடு பெண்கள் சந்திப்பு நிறைவடிந்தது. இக்கருத்தரங்கையும்
நிகழ்வுகளையும் நடத்த ஊடறுவுடன் கைகோர்த்தவர்கள்
1) திருவள்ளுவர்
மன்றம், பாண்டூப்
2) தமிழ்
இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
3) தமிழர்
நலக்கூட்டமைப்பு - மும்பை
4) விழித்தெழு
இயக்கம் - மும்பை
5) பகுத்தறிவாளர்
கழகம் - மும்பை
6) ஸ்பேரோ
- மும்பை
7) மகிழ்ச்சி
பெண்கள் அமைப்பு - மும்பை
8) வணக்கம்
மும்பை வார இதழ் - மும்பை
9) புஸ்தகா
மின்னூல் அமைப்பு - பெங்களூர்.
அவர்கள் அனைவருக்கும் நன்றி.
மறுநாள் நாங்கள் மும்பை தமிழர்களின் உறவு பாலமான தாராவிக்கு சென்றிருந்தோம்.. அங்கு
(தொடரும்)