கல்மரமும்
முதுமக்கள் தாழியும்...
பாண்டிச்சேரியின் இரண்டாம் நாள், திருவக்கரையில் இருக்கும் கல்மர பூங்காவிற்கு அழைத்து செல்வதாக நண்பர் பாலா கூறியிருந்தார். கல்மர பூங்கா ஒரு அதிசய வரலாறு கொண்டது எனவும் அது இந்திய நாட்டில் குறிப்பாக பாண்டிச்சேரியி இருப்பது பாண்டிச்சேரிவாசிகளுக்கு வரலாற்று மகிழ்ச்சி எனவும் பாலா கூறியிருந்தார். நான் இணையத்தில் தேடி வாசிக்க தொடங்கினேன். விவரங்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் படியில்லை. நேரிலேயே பார்த்து தெரிந்துகொள்வது என முடிவெடுத்துக்கொண்டேன்.
மறுநாள் காலை
10 மணியளவில் நண்பர்
பாலாவின் மோட்டார் வண்டியில் பயணத்தை தொடங்கினோம். எங்களுடன் தோழி
பல்லவியும் இணைந்து கொண்டார். எவ்வளவு தூரம்
பயணம்
செய்தோம் என
தெரியாது. பங்குனி மாத
வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்தது. நண்பர்
பாலா
இளநீர்
வாங்கி
தந்தார்.








கல்மரங்களுக்கு பெரிய பாதுகாப்போ அல்லது அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கான விதிமுறையையோ அங்கு எதையும் செய்திருப்பது மாதிரி தெரியவில்லை. திறந்த வெளியில் அடுக்கி வைத்திருக்கும் அந்த மரங்கள் காணாமல் போவதற்கு நிறைய காரணகாரியங்கள் இருக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றால் ஏன் இத்தனை அலட்சியமான இருப்பிடம் அம்மரங்களுக்கு? அங்கே பொறுப்பில் இருந்த டி.ராமச்சந்திரன் என்பவரிடம் சில விவரங்களை கேட்டேன். டி.ராமச்சந்திரன் 30 ஆண்டுகளாக இங்கு பொறுப்பில் இருக்கிறார்.
"அரசாங்கத்திடம் இந்த கல்மரங்களை பாதுகாக்க பெரிய மானியம் எதுவும் கிடைப்பதில்லை. கிடைக்கும் மானியத்தில் நாங்கள் அதை முடிந்த அளவு பராமரிக்கிறோம். ஆனால், பொதுமக்களும் அதன் முக்கியத்துவம் அறிந்து செயல்பட வேண்டும். அவர்களின் பெயரை பொக்கிஷங்களில்
எழுதுவது, குப்பைகள் போடுவது, மரங்களை தூக்கி செல்வது என இருந்தால் யாராலும் பாதுகாக்க முடியாது. இது அரசாங்கம் மட்டும் பாதுகாக்க வேண்டிய விஷயமில்லை. பொக்கிஷயங்களையும் வரலாற்றையும் அரசாங்கம் மனதுவைத்தால் மட்டும் பாதுகாத்திடலாம் என்பது மடமை. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இதற்காகவே 'பொது நீர்' எனும் அமைப்பினர் இங்கிருக்கும் நான்கு கிராமத்து மக்களை ஒருங்கிணைத்து 'கல்மரம் காப்போம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இருந்தாலும் இதன் முக்கியத்துவம்
குறைவாகத்தான் இருக்கிறது என்றார்.
நிறையை கல்மரங்கள் காணாமல் போய்விட்டதாகவும் , 18 மீட்டர் இருந்த கல்மரங்கள் 12 மிட்டருக்கு சிதிலமடைந்து சிறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தேவைகருதி சில மரங்களை இடம்பெயர்ந்து கொண்டு சென்றுவிட்டதாகவும் அதில் ஒன்று சென்னை அருங்காட்சியக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள து எனவும் அறியமுடிகிறது.
இந்தமாரிதியான கல்மரங்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கனடா,
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பெரிய அளவில்
இருப்பதாகவும் இணைய
செய்தியில் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்மரம் சொல்லும் புராணக் கதை என்ன?
இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் பெரும் நீர்நிலையாய் இருந்தது. அதையொட்டி இருந்த நிலப் பகுதிகளில் பெருங்காடுகள் இருந்தன. அக்காடுகளில் கனிதரும் வகையை சேர்ந்த மரங்களும் கனிதரா வகை மரங்களும் இருந்தன. திருமாலின் சீற்றத்திற்கு ஆளான அசுரர்கள் அந்த நெடியோனால் அழிக்கப்பட்டனர் . அந்த அசுரர்களின் எலும்புகளே இந்த நெடிய கற்கள் என்பது உள்ளூரில் வழங்கும் புராணக் கதை.
கல்மரம் சொல்லும் புராணக் கதை என்ன?
இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் பெரும் நீர்நிலையாய் இருந்தது. அதையொட்டி இருந்த நிலப் பகுதிகளில் பெருங்காடுகள் இருந்தன. அக்காடுகளில் கனிதரும் வகையை சேர்ந்த மரங்களும் கனிதரா வகை மரங்களும் இருந்தன. திருமாலின் சீற்றத்திற்கு ஆளான அசுரர்கள் அந்த நெடியோனால் அழிக்கப்பட்டனர் . அந்த அசுரர்களின் எலும்புகளே இந்த நெடிய கற்கள் என்பது உள்ளூரில் வழங்கும் புராணக் கதை.
நான்
பேசியதில் இந்த
கல்மர
விவரங்கள் தவிர்த்து மற்றுமொரு விஷயத்தையும் டி.ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்டார்.
கல்மரங்கள் இருக்கும் இங்கு
சில
இடங்களை தோண்டியதில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுத்ததாக கூறினார். சுமார்
10 ஆயிரம்
ரூபாய்
செலவு
செய்து
தோண்டியதில் இத்துப்போன நிலையில் தாழியின் ஐந்து
கால்கள் மட்டும் கிடைத்ததாக சொன்னார். எத்தனை
ஆண்டுகளுக்கு முன்பு
அது
புதைக்கப்பட்டது என்ற
விவரம்
தெரியாத வேளையில், தற்போது அந்த
5 கால்களும் காணாமல் போய்விட்டது என்றும் அவர்
வருத்தப்பட்டு கொண்டார் .

3000 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழர்களிடத்தில் பரவலாக
இருந்தது என்று
சொல்லப்படும்
தாழிக்குள் வைத்து புதைக்கும் பழக்கம், மலேசியாவிலும் இருந்ததா என்று
தெரியவில்லை. முதியவர்களின் சடலத்தை பெரிய
பெரிய
பானைகளில் அமர்ந்த நிலையில் வைத்து
புதைத்திருக்கிறார்கள் என்பது
தொல்லியலாளர்கள் கருத்தாக உள்ளது.
எனினும், அதிகம்
வயது
முதிந்தவர்களை அவர்கள் இறக்கும் முன்பே
கொஞ்சமாக உணவு,
அவர்களின் தேவைக்கான சில
பொருட்கள், குறிப்பாக கிண்ணம், விளக்குகள், கத்தி,
கல்மணிகள் உள்ளிட்ட பல்வகை பொருட்கள் வைத்து உயிருடன் இறக்கி
விடுவார்கள். பின்
அதை
எப்பவும் தோண்டி
பார்க்கமாட்டார்கள். இறந்தவர்களுக்கு மறுபிறப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணத்தினால் இறந்தவர்களின் உடலை தீ இட்டு எரிக்காமல் தாழியில் மறு வாழ்வுக்குத் தேவையான பொருட்களையும் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர் என்றும் நம்பப்படுகிறது என்றும் சொன்னார்.
இது தொடர்பாக இணையத்தில் சில கட்டுரைகள் உள்ளன. வாய்ப்பு இருப்பவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பார்க்கவும்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27330-2014-11-13-07-45-17
பின்குறிப்பு :
இந்த கட்டுரையை எழுதியதில் நான் ஆசீவகத்தை தெரிந்துகொள்ள முடிந்தது. ஆசீவக துறவிகளின் தவ வாழ்க்கையை இந்த தாழியில்தான் பெருவாரியாக முடித்துக்கொண்டுள்ளனர் என்று ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசீவகம் என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கமும் ஆகும். இவர்கள் கி.மு. 500-250 காலப் பகுதியில் முதல் பெளத்தர்கள், ஜைனர்களோடு ஒத்த காலத்தில் இருந்தாக கருதப்படுகிறது. இந்த மெய்யியல் பெளத்தம், ஜைனம், சார்வகம் போன்றே வேதத்தை முழுமையாக புறக்கணித்த மெய்யியல் ஆகும் என்கிறது விக்கிபீடியா விவரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக