புதன், 17 ஜூலை, 2019

நடு இணையத்தளத்தில் என் புகைப்படங்கள்...

நான் ஒரு  புகைப்படக்கலைஞரா என்ற கேள்வி தேர்ந்த புகைப்படக் கலைஞர்களுக்கு வரலாம்..? அவர்களுக்கு எனது பதில் நான் ஒரு பதிவாளர்; எனது பதிவானது கவிதையாகவும், பத்தியாகவும், கட்டுரையாகவும் வருவதுபோல, புகைப்படங்களாகவும் வெளிவருகிறது என்பதுதான்.

இயற்கையையும் மனிதத்தையும் நான் நேசிப்பதுப்போல், என் புகைப்படக் கருவியின் கண்களும் அதையே நேசிக்கின்றன. குழுகுழுவாக மக்கள் செல்பி எடுத்துக்கொண்டு ஆட்பறிக்கும்போது நானும் என் புகைப்படக்கருவியும் ஆகயத்தில் மிதந்துச் செல்லும் மேகங்களை ரசித்தபடி  எங்களின் கண்களால் கிளிக்கிக்கொண்டு இருப்போம்..

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என் ரசனைகள் மாறுபடுகின்றன. மாறுதல்களை என் புகைப்படங்கள் வழி நன்கு உணரலாம். சிலப்புகைப்படங்களை என் ரசனைக்கு தகுந்தபடி எடிட் செய்ய நேர்வதுண்டு. தனது குழந்தைக்கு அலங்கரிப்பதுபோலத்தான் அதுவும்.

எனது சில புகைப்படங்களை நடு இணைய பொறுப்பாளர்களே தேர்வு செய்து அவர்களின் அகப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்கள்...

உங்கள் பார்வைக்கு இந்த அகப்பக்கத்தை சொடுக்கிப் பார்க்கவும்...

https://naduweb.net/?p=3858

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக